ADVERTISEMENT

உள்ளாட்சி தேர்தல் - நேற்று ஒரே நாளில் 4,597 பேர் வேட்பு மனு தாக்கல்!

09:46 AM Sep 17, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT


தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளைத் துரித கதியில் மேற்கொண்டுவருகிறது.

ADVERTISEMENT

கடந்த 15ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில், முதல் நாளான அன்று 500-க்கும் குறைவானவர்களே வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், 16ம் தேதி 4,597 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இன்று அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நாட்களையும் சேர்த்து இதுவரை 4,975 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT