ADVERTISEMENT

"கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 4,500 பணியிடங்கள் ஒரு சில மாதத்தில் நிரப்பப்படும்"- அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு!

11:14 PM Aug 17, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் சித்தரேவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களைத் தேடி முகாம் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் விசாகன் தலைமையில் இன்று (17/08/2022) நடைபெற்றது.

இந்த விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு 3,747 பயனாளிகளுக்கு ரூபாய் 7.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வாங்கினார். விழாவுக்கு கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊராட்சித் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது, "ஆத்தூர் பகுதியில் தொடந்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சித்தரேவு பகுதியில் வாய்க்கால் சரி செய்யப்பட்டு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. குடிநீர் வழங்கும் பணிகள் தொய்வின்றி சீரக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அமைதி பூங்கா பகுதியில் மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் இன்று நியாய விலைக்கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். முதியோர் உதவிக்தொகை கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஓராண்டு காலத்தில் 2,500 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், வளர்ச்சித் திட்டங்கள் குறைபாடின்றி நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் அனைத்து வேலைவாய்ப்புகளும் வெளிபடை தன்மையுடன் நியமனம் செய்யப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கூட்டுறவுத் துறையில் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் 4,500 பணியாளர்கள் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வீடு இல்லாமல் இருப்போருக்கு ஏற்கனவே வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைவருக்கும் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும், ஆத்தூர் வட்டம், சித்தரேவு கிராமத்தில் நடைபெற்ற விழாவில் வருவாய்துறை சார்பில் 1,475 பயனாளிகளுக்கு ரூபாய் 3,27,46,130 மதிப்பீட்டிலும், வேளாண்மைத் துறையின் சார்பில் 499 பயனாளிகளுக்கு ரூபாய் 83,025 மதிபீட்டிலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 157 பயனாளிகளுக்கு ரூபாய் 8,10,350 மதிப்பீட்டிலும், சமூக நலத்துறையின் சார்பில் 88 பயனாளிகளுக்கு ரூபாய் 22,00,000 மதிப்பீட்டிலும், மீன்வளத்துறையின் சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூபாய் 18,32,970 மதிப்பீட்டிலும், சுகாதாரத்துறையின் சார்பில் 296 பயனாளிகளுக்கு ரூபாய் 6,04,000 மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 135 பயனாளிகளுக்கு ரூபாய் 6,91,500 மதிப்பீட்டிலும், மகளிர் திட்டம் சார்பில் 330 பயனாளிகளுக்கு ரூபாய் 85,85,000 மதிப்பீட்டிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் 604 பயனாளிகளுக்கு ரூபாய் 2,33,25,332 மதிப்பீட்டிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூபாய் 78,750 மதிப்பீட்டிலும், முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டம் சார்பில் 20 பயனாளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 83 பயனாளிகளுக்கு ரூபாய் 4,21,473 மதிப்பீட்டிலும் என மொத்தம் 3.747 பயனாளிகளுக்கு ரூபாய் 7.14 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT