Skip to main content

"கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 4,500 பணியிடங்கள் ஒரு சில மாதத்தில் நிரப்பப்படும்"- அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு!

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

"4,500 vacancies in the cooperative sector will be filled in a few months" - Minister I. Periyasamy announced!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் சித்தரேவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களைத் தேடி முகாம் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் விசாகன் தலைமையில் இன்று (17/08/2022) நடைபெற்றது. 

 

இந்த விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு 3,747 பயனாளிகளுக்கு ரூபாய் 7.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வாங்கினார். விழாவுக்கு கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊராட்சித் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது, "ஆத்தூர் பகுதியில் தொடந்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சித்தரேவு பகுதியில் வாய்க்கால் சரி செய்யப்பட்டு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. குடிநீர் வழங்கும் பணிகள் தொய்வின்றி சீரக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அமைதி பூங்கா பகுதியில் மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் இன்று நியாய விலைக்கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். முதியோர் உதவிக்தொகை கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஓராண்டு காலத்தில் 2,500 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், வளர்ச்சித் திட்டங்கள் குறைபாடின்றி நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் அனைத்து வேலைவாய்ப்புகளும் வெளிபடை தன்மையுடன் நியமனம் செய்யப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.  

 

மேலும், கூட்டுறவுத் துறையில் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் 4,500 பணியாளர்கள் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வீடு இல்லாமல் இருப்போருக்கு ஏற்கனவே வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைவருக்கும் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும், ஆத்தூர் வட்டம், சித்தரேவு கிராமத்தில் நடைபெற்ற விழாவில் வருவாய்துறை சார்பில் 1,475 பயனாளிகளுக்கு ரூபாய் 3,27,46,130 மதிப்பீட்டிலும், வேளாண்மைத் துறையின் சார்பில் 499 பயனாளிகளுக்கு ரூபாய் 83,025 மதிபீட்டிலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 157 பயனாளிகளுக்கு ரூபாய் 8,10,350 மதிப்பீட்டிலும், சமூக நலத்துறையின் சார்பில் 88 பயனாளிகளுக்கு ரூபாய் 22,00,000 மதிப்பீட்டிலும், மீன்வளத்துறையின் சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூபாய் 18,32,970 மதிப்பீட்டிலும், சுகாதாரத்துறையின் சார்பில் 296 பயனாளிகளுக்கு ரூபாய் 6,04,000 மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 135 பயனாளிகளுக்கு ரூபாய் 6,91,500 மதிப்பீட்டிலும், மகளிர் திட்டம் சார்பில் 330 பயனாளிகளுக்கு ரூபாய் 85,85,000 மதிப்பீட்டிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் 604 பயனாளிகளுக்கு ரூபாய் 2,33,25,332 மதிப்பீட்டிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூபாய் 78,750 மதிப்பீட்டிலும், முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டம் சார்பில் 20 பயனாளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 83 பயனாளிகளுக்கு ரூபாய் 4,21,473 மதிப்பீட்டிலும் என மொத்தம் 3.747 பயனாளிகளுக்கு ரூபாய் 7.14 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.