உயிர், உணர்வு, உடல், உடை அனைத்திலும் தேசப்பற்று: சிவச்சந்திரனின் குடும்பத்திற்கு தமிழிசை ஆறுதல்

CRPF

ஸ்ரீநகர் புல்வாமாவில் நடைபெற்ற கொடூரத்தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் அரியலூர் மாவட்டம், கார்குடியை சேர்ந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் வீட்டிற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள தமிழிசை, ''வீரத்தம்பி சிவச்சந்திரன் தன் தந்தைக்கும், தன் குழந்தைக்கும் விரும்பி வாங்கிக்கொடுத்த உடை இந்திய இராணுவ உடையை ஒத்த உடை, இந்த சோகத்திலும்.. அவர்கள் அந்த வீரத்தை நினைவுபடுத்தும் உடையை அணிந்திருந்தது என்னை நெகிழவைத்தது உயிர், உணர்வு, உடல், உடை அனைத்திலும் தேசப்பற்று, வீரவணக்கம்!'' என குறிப்பிட்டுள்ளார்.

Ariyalur jammu and kashmir pulwama attack sivachandran.c
இதையும் படியுங்கள்
Subscribe