ADVERTISEMENT
சென்னையில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் 433 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
பிரமாண்டமாய் சரவணா ஸ்டோர், ஜி ஸ்கொயர் ,ரேவதி, லோட்டஸ் குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களில் கடந்த ஜனவரி 29 முதல் 3 நாட்கள் வருமான வரி சோதனை நடந்தப்பட்டது. இந்த அதிரடி வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகைகள், பணம் ஆகியவை நேற்று வரை கணக்கிடப்பட்டது.
சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 25 கோடி பணம், 12 கிலோ தங்கம், 626 கேரட் வைரக்கற்கள் என மொத்தம் 433 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதை வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது.
Show comments