நாடாளுமன்றத்தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் இந்தியா முழுவதும் தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி செய்து வரும் வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியில் உள்ள காவல் உதவி ஆய்வாளர்கள் 41 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.