Skip to main content

சென்னையில் 25 ஆயிரம் வியாபாரிகளிடம் வசூலிக்கப்பட்ட 400 கோடி ரூபாய் திரும்ப கிடைக்குமா... ? திரிபுரா சிட் பண்ட் மோசடியில் சிக்கித்தவிக்கும் சிறு வியாபாரிகள்!

Published on 21/07/2019 | Edited on 21/07/2019

கர்நாடகாவைச் சேர்ந்த மோசடி சீட்டு கம்பெனியிடம் பணத்தை இழந்ததாக சென்னை வியாபாரிகள் சங்கம் சங்க பேரவையை சேர்ந்த சிறு வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் 124 கிளைகள் சென்னையில் மட்டும் 14 கிளைகள் என சுமார் 25 ஆயிரம் சிறு வியாபாரிகளை குறிவைத்து 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து திரிபுரா சீட் பண்ட் என்ற பெயரில் ஏமாற்றியதாக திரிபுரா சீட்டு நிறுவனத்தின் மீது இதுவரை 25 ஆயிரம் புகார்கள் போலீசில் குவிந்துள்ளன.

400 crores returned to 25 thousand traders...?


சென்னை சைதாப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அந்த திரிபுரா சீட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் ஆவார். தமிழகம் மட்டுமில்லாமல் புதுச்சேரி, கர்நாடகா ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 200 க்கு மேற்பட்ட கிளைகளைப் பரப்பி கடைகள் தோறும் சென்று வியாபாரிகளிடம் இருந்து பணத்தை வசூலித்து கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளனர்.

 

police400 crores returned to 25 thousand traders...?


பத்தாயிரம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரை என்று தினமும் வசூல் செய்துள்ளனர். 20 மாதங்கள் வசூல் முடிவில் அல்லது தேவைப்படும் நேரத்தில் தள்ளுபடி போக பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற விதிகள் இருந்ததால் வியாபாரத்தில் முதலீடு செய்ய இந்த தொகை உதவியாக இருக்கும் என சிறுக சிறுக சேர்த்து வைத்த காசை திரிபுரா சீட்டில் முதலீடு செய்தனர். தற்போது இரண்டு வருடங்களாக தொகை கிடைக்காததால் தவித்து வருகின்றனர் அந்த வியாபாரிகள்.

400 crores returned to 25 thousand traders...?


இதுதொடர்பான மோசடி வழக்கை பதிவு செய்துள்ள சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் இது போன்ற ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்து உள்ள நிலையில் கிருஷ்ண பிரசாத் மற்றும் அவருடைய மனைவி சுவர்ணா அவரது உதவியாளர் வேணுகோபால். பாலா. ஜெயப்பிரகாஷ் ஆகியோர் 5 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். முக்கிய நபரான வாசுவை இதுவரை கைது செய்ய முடியவில்லை. 

400 crores returned to 25 thousand traders...?


இந்த வழக்கில் திரிபுரா நிறுவனத்தின் நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பணம் கட்டிய வியாபாரிகளுக்கு பணத்தைத் திரும்பக் கொடுத்து விடுவோம் என்று உறுதியளித்துவிட்டு இருவரும் திட்டமிட்டு ஏமாற்றியதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

police


திரிபுரா சீட்டு நிறுவனத்தின் பினாமி சொத்துக்களை முடக்கி பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்ட வியாபாரிகள் உண்ணாவிரதம் நடத்த முடிவு எடுத்துள்ளனர். 25 ஆயிரம் வியாபாரிகளிடம் வசூலிக்கப்பட்ட 400 கோடி ரூபாய் திரும்ப கிடைக்குமா என்ற ஏக்கத்தில் வியாபாரிகள் தற்போது தவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.