Skip to main content

400 ஏக்கர் விவசாயம் நிலம் செழிக்க... இரு மாவட்ட மக்களின் பொதுப்பணி..!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 


கடந்த 16 ஆண்டுகள் கழித்து திண்டுக்கல் மாவட்டம், குடகனாறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள உபரி நீரை, கரூர் மாவட்டம் வெள்ளியணை பெரிய குளத்திற்கு நீரேற்றம் செய்ய, முழுமுயற்சியுடன் இரண்டு மாவட்ட மக்கள் ஒன்றிணைந்து, வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு மழைக் காலங்களில் விவசாயத் தேவைக்குப் பயனளிக்கும் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் பல ஆண்டுகளாக வறண்டு விவசாயம் செய்ய முடியாத பூமியாக உள்ளது.

 

இதற்குப் பிரதான காரணம் திண்டுக்கல் மாவட்டம், குடகனாறு அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டாமல் போனதால் வெள்ளியணை பெரியகுளத்தில் நீர் நிரம்பவில்லை.

 

குடகனாறு ஆற்றிலிருந்து வரும் துணை வாய்க்கால், கடந்த 16 ஆண்டுகளாக தண்ணீர் வராததால் புதர்மண்டி கிடக்கிறது. குடகனாறு அணை, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அழகாபுரி அருகே உள்ள கூம்பூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த குடகனாறு, கூம்பூர் பகுதியில் துவங்கி ஈசநத்தம், ஆர்.வெள்ளோடு, தம்மநாயக்கண்பட்டி வழியாக பாகநத்தம், சின்ன மூக்கனாங்குறிச்சி, பிச்சம்பட்டி, ஆர்.புதுக்கோட்டை, டி.கூடலூர் பகுதியைக் கடந்து பல கி.மீ பயணித்து கரூர் மாவட்டத்திற்குள் நுழைகிறது. இறுதியாக துணை வாய்க்கால் மூலம் வெள்ளியணை பகுதி கடைமடையை வந்தடைகிறது. 

 

குடகனாறு அணையிலிருந்து துணை வாய்க்கால் வழியாக வெள்ளியணை பெரியகுளத்துக்கு இடைப்பட்ட தூரம் 54 கிலோமீட்டர். திண்டுக்கல் - கரூர் மாவட்டங்களில் விவசாயம் செழிப்பாக இருக்க, குடகனாறு மிக முக்கியப் பங்காற்றி வந்த நிலையில், தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு துணை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் புதர் மண்டி கிடக்கும் துணை வாய்க்காலை தூர் வாருவதற்கு வெள்ளியணை பகுதி மட்டுமின்றி இரண்டு மாவட்ட பொதுமக்களும் இணைத்து கடந்த ஒரு வாரமாக  தூர்வாரி வருகின்றனர்.

 

தற்பொழுது 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள், விவசாயிகள், தன்னார்வ இளைஞர்கள் தினந்தோறும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதிபலனின்றி வெள்ளியணை கடைமடை பெரிய குளத்திற்குத் தண்ணீர் நிரப்புவதற்குத் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். இதுகுறித்து வெள்ளியணை ஊராட்சி மன்றத் தலைவரும், குடகனாறு பாதுகாப்புக்குழு செயற்குழு உறுப்பினருமான சுப்பிரமணியன், “கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடகனாறு அணை நிரம்பி அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக 54 கிலோமீட்டர் இடைப்பட்ட தூரத்தில் உள்ள வாய்க்கால் பகுதியில் ஆங்காங்கே புதர் மண்டிக் கிடப்பதை தூர்வாரி வருகின்றனர். குடகனாறு ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை கொண்டு வந்து சேர்க்க முழு முயற்சியுடன் பணியாற்றி வரும் நிலையில், தற்போது 39 கி.மீ தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

 

100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் தங்களது பங்களிப்பை முழு ஆர்வத்தோடு ஒத்துழைப்பு அளித்து வருவதால் இது சாத்தியமாயிற்று. இன்னும் மூன்று நாட்களில் முழுமையாக துணை வாய்க்கால் பகுதியைக் கடந்து வெள்ளியணை பெரியகுளத்தில் தண்ணீர் நிரப்பும் முழு முயற்சியில் இருக்கிறோம். அப்படி வெள்ளியணை பெரியகுளம் முழுவதுமாக நிரம்பினால் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், பல ஆண்டு காலமாக எங்களது குடிநீர்த் தேவையும் பூர்த்தி அடையும். அதுமட்டுமின்றி நீர்ப் பிடிப்பு அதிகமாகி இதன் எதிரொலிப்பு அய்யர்மலை வரை இருக்கும்” என்றார்.

 

வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த சரவணன், “குடகனாறு அணையிருந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் நிரம்பி உள்ளது. உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் முழு ஈடுபாட்டுடன் துணை வாய்க்காலை தூர் வாரி வருகின்றனர். இதன் காரணமாக பல ஆண்டுகளுக்குப் பின் கடைமடை பகுதி விவசாயிகள் பாசன வசதி பெற உள்ளனர். மேலும், வெள்ளியணை பெரியகுளமும் நிரம்ப உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மழைக் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் குடகனாறு அணை நிரம்பும் நேரங்களில் அரசு, உபரி நீரை தவறாமல் திறந்துவிட்டால், எங்கள் பகுதி விவசாயம் செழிப்பதுடன், எங்களது குடிநீர்த் தேவையும் பூர்த்தி அடையும். எனவே, தமிழக அரசு இதைக் கருத்தில் கொண்டு மழைக்காலங்களில் அணையிலிருந்து உபரி நீரைத் திறந்துவிட்டு உதவ வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.