Skip to main content

சேலம் மாநகராட்சி பொறியாளர் வீட்டில் 40 பவுன் நகைகள், 3 லட்சம் ரொக்கம் கொள்ளை!

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

சேலம் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகே மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அசோகன் (57). சேலம் மாநகராட்சியில் மாநகர பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பரிவாதினி. இவர்களுக்கு ஜீவிகா என்ற மகளும், பிரஜீத் என்ற மகனும் உள்ளனர். மகள், சென்னையில் படித்து வருகிறார்.

கடந்த 9ம் தேதியன்று அசோகன், சேலம் மாநகராட்சி அலுவல் தொடர்பாக சென்னைக்குச் சென்றிருந்தார். நீச்சல் வீரரான பிரஜீத்தை அழைத்துக்கொண்டு, திருவண்ணாமலையில் நடைபெறும் நீச்சல் போட்டிக்கு பரிவாதினி சென்றுவிட்டார்.

 

 40 pound jewelery, 3 lakh cash loot at Salem Corporation engineer's house!


இந்நிலையில், சென்னை சென்றிருந்த அசோகன், சனிக்கிழமை (ஜன. 11) அதிகாலை 5 மணியளவில், வீடு திரும்பினார். முகப்பு கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே பீரோக்கள் திறந்த நிலையிலும், பொருள்கள் சிதறியும் கிடந்தன.

இதுகுறித்து அம்மாபேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். காவல்துறை உதவி ஆணையர் பூபதிராஜன், ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரித்தனர்.

பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. விரல் ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாயிடம் சிக்கி விடக்கூடாது என்பதற்காக, கொள்ளையர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவியுள்ளனர்.

அவருடைய வீட்டில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. என்றாலும், சிசிடிவி மேராவில் காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்கையும் மர்ம நபர்கள் கையோடு எடுத்துச் சென்றிருப்பதும் தெரிய வந்தது. தொழில்நுட்பம் தெரிந்த ஆசாமிகள்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.

பொறியாளர் அசோகன் வீடு, மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் அமைந்துள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். அசோகன் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரும் வீட்டில் இல்லாத நேரத்தை நோட்டமிட்டே மர்ம நபர்கள் உள்ளே புகுந்திருக்க வேண்டும். அல்லது அவர்களுடைய நடவடிக்கைகளை நன்கு அறிந்த நபர்களே கூட இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.