Skip to main content

கொள்ளை, கொலை என 25 வயதிற்குள் 40 வழக்குகள் .!! சிக்கிய சிறைப்பறவை.!!!!

Published on 18/04/2018 | Edited on 18/04/2018

 

Chandran 600.jpg

     
சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு காவல் நிலையத்திற்குட்பட்ட தேத்தான்பட்டி கிராமத்தில், கடந்த 31ம் தேதி பின்னிரவில் வெளிநாட்டில் பணியிலிருக்கும் அம்பலமூர்த்தியின் மனைவி சாந்தி என்பவர் குளோராபார்ம் எனும் மயக்கமருந்து கொடுத்து கொல்லப்பட்டதும், அவரிடமிருந்து செயின், வளையல் உட்பட 15 பவுன் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரியவர சுறுசுறுப்பாக இயங்கியது காரைக்குடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கார்த்திக்கேயன் தலைமையிலான டீம்.

 

    கதவை உடைத்து திருடும் கும்பல் தான் என ஆரம்பத்திலேயே உறுதிசெய்த காவல்துறை, உள்ளூரிலுள்ள எவருடைய உதவி இல்லாமல் இந்த ஆதாயக்கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என முடிவு செய்து அருகிலுள்ள கிராமத்திலுள்ள முன்னாள் குற்றவாளிகளை நெருங்க, முதலில் அரண்மனைப்பட்டியை சேர்ந்த ரைஸ்மில் சந்திரன் சிக்கியுள்ளார். அதன்பின் ஆதாயக் கொலையின் முதன்மைக் குற்றவாளியான திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா சேகரனை கைது செய்து விசாரிக்க, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா என இருமாநிலங்கள் தேடும் மிகப்பெரிய கொள்ளைக் கும்பலின் தலைவனே அவன் தான்.! அவன் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இத்தனைக்கும் அவனுடைய வயது 25 என்பது குறிப்பிடத்தக்கது.

 

Raja Sekar

 

   " மதுரை ஜெயிலிலிருக்கும் போது அங்குள்ள சிறைக்கூட்டாளியான அய்யப்பனின் தொடர்பு ஏற்பட அவரின் மூலம் அரண்மனைப்பட்டி சந்திரனின் தொடர்பு அறிமுகமானது. ஏதாவது ஹவுஸ் புரோக்கிங்க் இருந்தால் கூறுங்கள். வருவதில் செலவு போக பாதி.! பாதி.!! என கூறி வைக்க, இங்கு கொள்ளையடித்தால்  சுமார் 70 பவுனாவது தேறூம் எனக்கூறி தனியாக இருக்கும் சாந்தியின் வீட்டைக் காண்பித்தார் அவர். சம்பவத்தின் முந்தைய இரவில் திருச்சியிலிருந்து டூவீலரிலேயே வந்து வீட்டிற்குள் ஏறிக்குதித்து கதவை உடைக்க ஆரம்பித்தேன். சப்தம் கேட்டதால் வெளியில் வந்து எட்டிப்பார்த்த சாந்தி, ஏதும் அறியாததால் திரும்ப வீட்டினுள் சென்று விட்டார். மறுபடியும் கதவை உடைத்து வீட்டிற்குள் உள் நுழைந்து படுக்கையறை அருகிலேயே சுமார் 1 மணி நேரமாக நின்று கொண்டிருந்தேன். சரியாக 3 மணிக்கு அந்தக் கதவை தட்ட வெளியில் வந்தார் சாந்தி. இது தான் தருணமெனக் கையில் வைத்திருக்கும் குளோரோபார்மைக் கொண்டு முகத்தில் வைத்து மயக்கமடைய செய்து நகைகளைக் கொள்ளையடித்தேன்.  அதன் பிறகு தேடிப்பார்த்தேன். ஏதும் சிக்காததால் புறப்பட்டுவிட்டு விட்டேன். கையில் கிடைத்த நகைகளை பழனியில் விற்று ஆளுக்குப் பாதியாக பிரித்துக்கொண்டோம். இப்பொழுது சந்திரன் போலீஸிடம் மாட்டியதால் நானும் மாட்ட வேண்டியதாயிற்று." என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த ராஜசேகரனை திருச்சி சிறைச்சாலைக்கு அனுப்பியுள்ளது காரைக்குடி துணை சரக காவல்துறை.

 

   திண்டுக்கல் வடக்கு மற்றும் தெற்கு, மதுரை அவனியாபுரம். கூடல் நகர், காங்கேயம், அருப்புக்கோட்டை, பூந்தமல்லி, திருவல்லிக்கேணி மற்றும் கர்நாடகவில் குண்டல்பேட்டை, மாண்டியா உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் மொத்தமாக 40 வழக்குகள் உள்ளன கைதான ராஜசேகர் மீது. இதில் விருதுநகர் மாவட்டத்திலும், சென்னையிலுமாக இரு குண்டர் தடுப்பு வழக்குகளும் உள்ளது. கர்நாடகாவில் இவனுடைய கூட்டாளிகளான ரவி, மணி மற்றும் சைலு-வினை தற்பொழுது வரை போலீசார் தேடிவருவது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள்; கள்ளக்குறிச்சியில் துணிகரம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Robbery with metal detector; Venture in Kalakurichi

கள்ளக்குறிச்சியில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நூதன முறையில் எந்த பகுதியில் நகைகள் உள்ளது என கண்டறிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்ஜோதி. அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் 67 சவரன் நகை மற்றும்  23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், வளவனூர் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதயா மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 25 சவரன் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தங்க நகை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளை;போலீசார் விசாரணை

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Robbery in three shops in succession; police investigation

ஈரோட்டில் மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் துரித உணவு கடை வைத்திருந்தார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் சாவியை திறந்து அதில் இருந்த ரூ.3000 பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.

அதனருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை  உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர். குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டுப் போய் இருந்தது.

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.