Skip to main content

ஆவடி அருகே 4 வயது சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மற்றுமொருவர் கைது!!

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

 

சென்னையை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் 4 வயது சிறுமி குளியலறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டது ஊர்ஜிதமாகிய நிலையில் முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் எனும் கொடூரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  

 4-year-old girl sexual abuse near Avadi;The other was arrested!


சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் தனியார் தொழிற்சாலைஊ ழியரரான ராஜேந்திரன்.  இவரது நான்கு வயது மகள் சன்மதி வீட்டின் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டார். மாலையில் இருந்தே சன்மதியை காணவில்லை என உறவினர்களும், பெற்றோர்களும் தேடிவந்த நிலையில் வீட்டில் குளியலறையில் 4 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 4-year-old girl sexual abuse near Avadi;The other was arrested!


இதுதொடர்பாக திருமுல்லைவாயில் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து சிறுமியின் உடலை மீட்ட காவல்துறையினர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் அந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து குளியல் அறையில் கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. மேலும் அந்த சிறுமியின் கம்மல், சிகை போன்றவை அந்த கொடூரனின் படுக்கையில் இருந்து கைப்பற்றப்பட்டது, மேலும் அவனது வீட்டு கழிவறை சற்றுமுன் பினாயிலால் கழுவப்பட்டிருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்த போலீசார் துருவி துருவி நடத்திய விசாரணையில் மீனாட்சி சுந்தரம் சிக்கினான். 

அவனுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீனாட்சி சுந்தரம் அவனது  மருமகளிடமே தவறாக நடந்துகொள்ள முயன்றதால் அவர் தனிக்குடித்தனம் போனதாகவும் கூறப்படுகிறது. அவனது கொடூர காமம் அந்த சிறுமி மீது திரும்பி இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியிருப்பது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவன் மட்டுமின்றி இந்த வழக்கில் அவனது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். இறந்த அந்த சிறுமியின் உடலை மறைத்து வைக்க அவரது மனைவி ராசாத்தியம்மாள் உதவியதாக அவன் விசாரணையில் தெரிவிக்க கொலையை மறைக்க உதவிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.