Skip to main content

சிக்கன் பக்கோடா கேட்டு அடம்பிடித்த 4 வயது சிறுமி அடித்துக்கொலை; வடமாநில கொடூரன் கைது!

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

சிறுமி ஒருவரை டாஸ்மாக்கிற்கு அழைத்துச் சென்ற வடமாநில இளைஞர் ஒருவன்  சிக்கன் பக்கோடா கேட்டு அடம்பிடித்தற்காக அந்த சிறுமியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த மதுரா கொத்தம்பாக்கம் பகுதியில் ஹாலோபிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள் வேலை செய்கின்றனர். குறிப்பாக 25 குடும்பத்தினர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

 4-year-old girl beaten for chicken pakoda; Northern Territory youth arrested

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அமீர் என்பவர் தனது மனைவி மற்றும் நான்கு வயது மகளுடன் அந்த தொழிற்சாலையில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவருடைய உறவினரான நிலக்கர் என்ற இளைஞருடன் சென்ற அமீரின் மகள் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர்கள் அவனிடம் விசாரித்துள்ளனர். ஆனால் மது போதையில் இருந்த நிலக்கர் அந்த சிறுமி என்ன ஆனார் என்பது குறித்து தெளிவாக சொல்லவில்லை. இதனால் பல இடங்களில் சிறுமியை தேடி அலைந்துள்ளனர் பெற்றோர்கள். இப்படி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இப்படியிருக்க திங்கட்கிழமை காலையில் ஹாலோபிளாக் கற்கள் தயார் செய்யும் அந்த தொழிற்சாலையின் பின்புறம் உள்ள ஒரு முட்புதரில் காணாமல் போன அந்தச் சிறுமி முகத்தில் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

 

 4-year-old girl beaten for chicken pakoda; Northern Territory youth arrestedpolice

இதைப் பார்த்து அதிர்ந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக வெள்ளவேடு காவல்நிலையத்திற்கு புகார் அளித்தனர். முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுமியின் உடலை மீட்ட காவல்துறையினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக சிறுமியின் உடலை அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட போது முதலில் சிறுமி தவறி விழுந்ததாக நிலக்கர் சொன்னதை உண்மை என நம்பி காவல்துறையினர் வழக்கை முடிக்கலாம் என நினைத்த நேரத்தில் இது ஒரு கொலை என்பது சிறுமியின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிய வந்தது.

policepolice

 

police

அதனையடுத்து நிலக்கரை போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தனர். அதேபோல் அவனது கூட்டாளிகள் 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை நிலக்கர் டாஸ்மார்க் மதுக் கடைக்கு அழைத்துச் சென்ற தகவல் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நிலக்கரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியின் மரணத்திற்கான திடுக்கிடும் காரணம் தெரிய வந்தது. சம்பவத்தன்று டாஸ்மாக் கடைக்கு சிறுமியுடன் சென்ற நிலக்கர் திரும்பி வரும்போது சிக்கன் பக்கோடா வாங்கி வந்ததாகவும், பெரிய பாலம் ஒன்று மேல் உட்கார்ந்து சாப்பிட்டதாகவும், அப்போது சிக்கன் பக்கோடா தனக்கு வேண்டும் என கேட்டு அந்த சிறுமி அடம்பிடித்ததில் அந்த சிறுமி நிலக்கரின் கையை கடித்ததால் ஆத்திரமடைந்த நிலக்கர்  சிறுமியை அடித்துக் கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் சிறுமி கீழே விழுந்து உயிர் இழந்ததாக நாடகமாடியதையும் ஒப்புகொண்டான். இதனையடுத்து வடமாநில கொடூரன் நிலக்கரை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.