4 Tamil Nadu fishermen arrested!

மீன்பிடி தடைக்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் ஆர்வமுடன் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கச் சென்றனர்.

Advertisment

அப்போது ஸ்ரீலங்கா நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இன்று அதிகாலை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ஒரு படகையும் அதில் இருந்த 4 மீனவர்களையும் கைது செய்து சிறைபிடித்துச் சென்றுள்ளனர். சிறைபிடித்துச் சென்ற இலங்கை கடற்படையினர், 4 மீனவர்களை இலங்கையில் உள்ள கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

மேலும், இந்த 4 மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்து பிற்பகலுக்கு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியிலும், தமிழ்நாடு மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.