Advertisment

“4 வட்டார புத்தொழில் மையங்கள் தொடங்கப்படவுள்ளது” - முதல்வர் ஸ்டாலின்

4 Regional Industrial Center to be started in Tamil Nadu says cm Stalin

சென்னை நந்தம்பாக்கத்தில் பன்னாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து இவ்விழாவில் பேசிய முதல்வர், “தொழில் தொடங்குவதற்கு 100பயனாளிகளுக்கு ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றும் எம்.எஸ்.எம்.ஏ துறையின்முன்னேற்றத்திற்காக நம்முடைய அரசுதனிக்கவனம் செலுத்தி வருகிறது.ஊரக பகுதிகளில்வேலைவாய்ப்புகளைப்பெருக்க சிறு குறு தொழில் நிறுவனங்கள் அவசியம்.

Advertisment

சென்னை, கோவை போன்ற தொழில் மிகு நகரங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும்தொழிலாளர்களுக்குத்தரமான, குறைந்த விலையும் தங்குமிட வசதி என்பதுமிகப்பெரியபிரச்சனையாகவும் சவாலாகவும் இருந்து வருகிறது.இதற்குத்தீர்வாக அரசுதங்கும் விடுதிகள்கட்டித்தரப்படும்என்று அறிவிக்கப்பட்டுமுதற்கட்டமாகச்சென்னை, கோவை ஆகிய இடங்களில் கட்டுமானப் பணிகள்முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டிலிருந்துமட்டும் 6000க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் ஸ்டாட் ஆப்இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதுவரை பதிவு செய்யப்பட்ட ஸ்டாட்ஆப்நிறுவனங்களின் எண்ணிக்கையைவிடக்கடந்த இரண்டுஆண்டுகளாகப்பதிவு செய்யப்பட்டஸ்டாட்ஆப்நிறுவனத்தின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகம். இதுவே திமுக ஆட்சியின்வேகத்தைப்பறைசாற்றும் வகையில் உள்ளது.

மதுரை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளதைப்போல் நடப்பு நிதியாண்டில் சேலம், ஓசூர், கடலூர் மற்றும் தஞ்சை உள்ளிட்ட இரண்டாம்,மூன்றாம்கட்ட நகரங்களில் வட்டார புத்தொழில்மையங்களை நிறுவவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை 6 தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 6 தொழிற்பேட்டைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe