Skip to main content

தொழிலுக்கு இடையூறு: ஓய்வு பெற்ற சப்-இன்ஸ் பெக்டர் கொலை வழக்கில் 4 பேர் கைது

Published on 22/08/2018 | Edited on 22/08/2018
4 persons arrested in retirement sub-inspector murder case

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது டி.எடப்பாளையம். இந்த கிராமத்தில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் அப்துல் ஜபார் என்பவர் கடந்த 27.06.2018 மாலை அவருக்கு சொந்தமான வயல்வெளி வீட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
 

 

 

இந்த கொலை தொடர்பாக திருவெண்ணைநல்லூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.விஜயகுமார் மேற்பார்வையில், உளூந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பி.இராஜேந்திரன் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு காவல் தணை கண்காணிப்பாளர் டி.வீமராஜ் ஆகியோர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் ஜோகிந்தர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நடராஜன், பிரகாஷ், அகிலன், சிவசந்திரன், திருமால் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
 

 

 

இரண்டு மாதங்களாக நடந்த விசாரணையில் மோகன், ரவி, செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடம் இருந்து இன்னோவா கார், பஜாஜ் பல்சர் பைக் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய இரண்டு கத்திகள் கைப்பற்றப்பட்டது. 

 

4 persons arrested in retirement sub-inspector murder case


 

இந்த கொலை வழக்கில் மோகன் என்பவர் மூளையாக செயல்பட்டும், சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளார். இவர் எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஐந்து மணல் அடிக்கும் லாரிகளை வைத்துள்ளார். இவரின் தம்பி ரவி, இந்த லாரிகளை நிர்வகித்து வருகிறார். மணல் அடிக்கும் தொழிலுக்கு துணையாக இருந்துள்ளார். செல்வம், மோகனின் கார் மற்றும் லாரி டிரைவராக இருந்துள்ளார்.
 

கொலை செய்யப்பட்ட அப்துல் ஜப்பார், மோகனின் மணல் அடிக்கும் தொழிலுக்கு இடையூராக இருப்பதாகவும், அவ்வப்போது போலீசாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் கூறி தனது தொழிலுக்கு இடையூறு செய்வதாகவும் இதனால் பலமுறை பிடிப்பட்டு அவரால் மோகன் சிறைக்கு சென்றுள்ளார்.
 

 

 

இதனால் அப்துல் ஜப்பார் உயிருடன் இருக்கும் வரை நாம் தொழில் செய்ய முடியாது என்று மோகன், ரவி, செல்வம் ஆகியோர் கூடி பேசியதுடன், அவரை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் தங்களது திட்டத்தை நிறைவேற்ற மோகனின் தாய் மாமன் மகள் வழி பேரனான பெங்களுர் கே.ஆர்.புரம் கூலிப்படையை சேர்ந்த திலீப்குமார் என்பவரை சம்பவத்தன்று வரவழைத்துள்ளனர். திட்டமிட்டப்படி அப்துல் ஜப்பாரை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 

திலீப்குமார் 08.06.2018 அன்று பெங்களூர் கே.ஆர்.புரம் போலீசில் சரண் அடைந்தான். இதையடுத்து பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மோகன், ரவி, செல்வம் ஆகியோர் உளூந்தூர்பேட்டை ஜெ.எம். 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.