Skip to main content

காதல் ஜோடிகளை குறி வைத்து வழிப்பறி; 4 பேர் கும்பல் அதிரடி கைது!

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

சேலத்தில், காதலர்களோடு தனிமையில் வலம் வரும் இளம்பெண்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

 

 

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் பவித்ரா (25). இவருடைய உறவினரான மோகனசுந்தரம் (25) என்பவர் சேலம் அஸ்தம்பட்டியில் பெற்றோருடன் வசிக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த 22ம் தேதி இரவு, சேலத்தில் இருந்து பவானிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். 

 

4 people Robbery gang arrested in salem

 

அப்போது சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பட்டர்பிளை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களை பத்து பேர் கொண்ட ஒரு கும்பல் திடீரென்று வழிமறித்தது. அந்த கும்பல் கத்தி முனையில் பவித்ரா அணிந்திருந்த நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடியது.

 

 

இதுகுறித்து பவித்ரா, கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில், பட்டர்பிளை மேம்பாலத்தில் ஏற்கனவே ஒரு கும்பல் இதுபோல் காதலர்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்ததாக தகவல் கிடைத்தது. 

 

 

இது தொடர்பாக கொண்டலாம்பட்டி புத்தூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டன் (21), அவருடைய கூட்டாளிகள் பெரிய புத்தூரைச் சேர்ந்த சுபாஷ் (27), இளங்கோ (28), தினேஷ் (27) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

 

அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த மூன்று ஆண்டுகளாக, இரவு நேரத்தில் பட்டர்பிளை பாலத்தில் தனிமையில் வரும் காதல் ஜோடிகளை குறி வைத்து, பெண்களிடம் நகைகளை பறித்து வந்தது தெரிய வந்தது. மேலும், சில பெண்களை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி வந்ததும், காதலனை அடித்து விரட்டிவிட்டு சில பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. எனினும் காவல்துறையினர் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை. 

 

 

இந்த கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.