Advertisment

நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறார்கள்; தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

4 minors drowned; Tamil Nadu Chief Minister Relief Notification

சிவகங்கை மற்றும் மயிலாடுதுறையில் நீரில் மூழ்கி உயிரிழந்த நான்கு சிறார்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

நேற்று சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி கிராமத்தை ஒட்டியுள்ள கோவிலில் குளத்தில் லட்சுமணன் என்பவரின் மகன் சந்தோஷ் (7) மற்றும் ஒரு சிறுமி உட்பட 3 பேர் குளத்தில் இறங்கி குளிக்கச் சென்றுள்ளனர். படித்துறையில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்த பொழுது மூன்று சிறுவர்களில் ஒரு சிறுவன் நீருக்குள் மூழ்கி விட, சிறுவனை காப்பாற்ற சந்தோஷ் என்ற சிறுவனும் அதனைத் தொடர்ந்து சிறுமி ஒருவரும் குளத்தில் இறங்கியுள்ளனர்.

Advertisment

இதில் மூன்று பேரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதில் ஒரு சிறுவனின் உடல் ஊரணியில் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், அந்த இடத்தில் வந்து பார்த்த பொழுது சிறார்களின் ஆடைகள் குளத்தின் படித்துறையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக குளத்தில் இறங்கி மூன்று பேரின் சடலமும் மீட்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறார்களின் உடல்களை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அபினேஷ் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். 4 சிறார்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

sivakangai TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe