Advertisment

4 லட்சம் அபேஸ்; சிசிடிவியில் சிக்கிய இருவர்;போலீசார் விசாரணை!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை இரண்டு இளைஞர்கள் நூதன முறையில் திறந்து திருடிச் செல்லும் சிசிடிவிகாட்சிகள் போலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisment

cctv

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

திருவள்ளூர் மாவட்டம் உட்கோட்டை அடுத்த வெங்கடேசன் என்பவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிட்டி பகுதியில் ரப்பர் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார்ப்ரேஷன் வங்கியில் இருந்து 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்து அவருடைய ஸ்கூட்டர் இருக்கையின் அடியில் உள்ள ஒரு பெட்டியில் வைத்து உள்ளார். வண்டியை எடுத்துக்கொண்டுதொழிற்சாலைக்கு சென்றுள்ளார் வெங்கடேஷ்.

Advertisment

cctv

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

செப்பேடு அருகில் உள்ள தேநீர்க் கடையில் வாகனத்தை நிறுத்திவிட்டு தேநீர் அருந்த சென்றபோது இவரைப் பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தின் அருகில் நின்று சுற்றுமுற்றும் நோட்டமிட்டனர். யாரும் இல்லாத நேரம் பார்த்து இருவரும் ஸ்கூட்டியின் பின்பக்க இருக்கைக்கு அடியில் இருந்த பெட்டியை திறந்து அதில் உள்ள பணத்தை கொள்ளையடித்தனர். இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது இந்த காட்சிகள் கிடைத்தது. இரு நபர்கள் யார் என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

police CCTV footage Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe