உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க, உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகின்றது. சென்னை அதிக பாதிப்புகளுடன் முதல் இடத்தில் இருந்து வருகின்றது. அதையும் தாண்டி வடமாவட்டங்களில் அதன் பாதிப்பு என்பது அதிகமாக இருந்து வருகின்றது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாகி வருவதால், உளுந்தூர்பேட்டையில் ஜூலை 16 முதல் 19ஆம் தேதி வரை 4 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.