Skip to main content

குறைந்த விலைக்கு நிலம் தருவதாகக் கூறி 4 கோடி ரூபாய் மோசடி; ரியல் எஸ்டேட் அதிபர்கள் கைது

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

 

4 crore fraud for giving land at a low price; Real estate businessmans arrested!

 

குறைந்த விலைக்கு வீட்டு மனைகளை தருவதாகக் கூறி, 1250 பேரிடம் 4 கோடி ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக ரியல் எஸ்டேட் அதிபர்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயக்கனஹள்ளி சுபைதார்மேட்டைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 42). இவருடைய தம்பி அசோக்குமார் (வயது 41). இவர்கள் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தனர். 

 

மொத்தமாக நிலத்தை வாங்கி, முதலீட்டாளர்களுக்குக் குறைந்த விலையில் பிரித்துக் கொடுப்போம் என விளம்பரம் செய்தனர். இதை நம்பி சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். 

 

கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் 2016- ஆம் ஆண்டு வரை 1250 பேரிடம் 4 கோடி ரூபாய் வரை வசூல் செய்துவிட்டு, திடீரென்று தலைமறைவாகி விட்டனர். 

 

இந்நிறுவனத்தில், சேலத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர் 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தார். தான் ஏமாற்றப்பட்டது குறித்து மனோகரன், சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் தமிழ்ச்செல்வன், அசோக்குமார் ஆகியோர் மீது கடந்த 2016- ஆம் ஆண்டில் புகார் அளித்தார். 

 

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அண்ணன், தம்பி இருவரையும் தேடி வந்தனர். ஆறு ஆண்டுகள் ஆகியும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அவர்கள் இருவரும் சேலம் 5 சாலை பகுதியில் செல்வதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜ்குமாருக்கு புதன்கிழமை (டிச. 29) தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். 

 

விசாரணையில், முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணத்தைக் கொண்டு அவர்கள் பல்வேறு இடங்களில் காலி மனைகளை வாங்கி போட்டிருப்பது தெரிய வந்தது. எந்தெந்த இடங்களில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்களை கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.