Skip to main content

365வது நாள் கதிராமங்கலம் போராட்டம்; அரசியல் தலைவர்கள் கண்டன உரைவீச்சு!

Published on 19/05/2018 | Edited on 19/05/2018
365


கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக 365வது நாள் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பங்கெடுத்துக்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த ஆண்டு மே19ம் தேதி ஓஎன்ஜிசி குழாய் பதிப்பதற்கு எதிராகவும், அதன் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஓஎன்ஜிசி நிறுவனத்தால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் நஞ்சாவதாகவும், எண்ணெய் கசிவு எற்பட்டு விளைநிலங்கங்கள் பாலைவனமாவதாகவும் கூறி போராட்டத்தை தொடங்கினர்.
 

365


பிறகு மே 30ம் தேதி ஸ்ரீராம் என்பவரது நிலத்தில் எண்ணெய் உடைப்பு ஏற்பட்டு தீப்பிடித்ததன் காரணமாக கிராமமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடத்தி மக்களை ஓட ஓட விரட்டினர். அதோடு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் கைது செய்தனர்.

இதனைதொடர்ந்து இந்த பகுதியில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் முற்றிலுமாக வெளியேற வேண்டும், காவிரி பாசன பகுதியை பாதுக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
 

365


இந்த போராட்டத்தின் 365வது நாளான இன்றைய போராட்டத்தில் போராட்ட குழு தலைவர் ஜெயராமன், இயக்குனர் கௌதமன், மருத்துவர் பாரதிசெல்வன் உள்ளிட்டோரும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், விவசாய அமைப்பினரும் பங்கேற்றனர். நாள் முழுவதும் போராட்டம் நடத்துவதாக அறிவித்ததை அடுத்து கதிராமங்கலம் கிராமம் மற்றும் ஓஎன்ஜிசி ஆழ்குழாய் கிணற்றிற்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் கிராம மக்கள் சிறுவர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர். தாய்மார்கள் போராட்டக் களத்திலேயே தொட்டில் கட்டி குழந்தைகளை தூங்கவைத்தனர்.
 

365


மன் சார்ந்த கிராமிய பாடல்கள் முழங்கப்பட்டன, புத்தர் கலைக்குழுவினர் பறையிசை நடத்தி போராட்டத்தினரை சிந்திக்க வைத்தனர். போராட்ட களத்திலேயே மதிய உணவு தயாரித்து மக்களுக்கு வழங்கினர்.

போராட்ட ஒருங்கினைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறுகையில், ஓராண்டாக ஓ.என்.ஜி.சிக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் அரசு சற்றும் செவிக்கொடுக்காமல், மாற்றுவழியை தேடுகிறது. ஒ.என்.ஜி.சி நிறந்தரமாக வெளியேற வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும்." என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

படிப்பதற்கு வயது தடையில்லை... 82 வயதில் 25வது டிகிரிக்கு விண்ணப்பித்த முதியவர்!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

Age is not a barrier to study ... An old man who applied for the 25th degree at the age of 82!

 

படிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதற்கு அடையாளமாக இருபத்து ஐந்தாவது டிகிரிக்கு விண்ணப்பித்திருக்கிறார் 82 வயதை தாண்டிய முதியவர்.

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ள கிராமம் கதிராமங்கலம். மீத்தேன் திட்டப் போராட்டத்தால் உலகெங்கும் அறியப்பட்ட பசுமையான கிராமம்தான் கதிராமங்கலம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்தான் 82 வயதான ஓய்வுபெற்ற அரசு பாலிடெக்னிக் ஆசிரியர் குருமூர்த்தி. அரசுப் பணியில் இருக்கும்போதே திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பகுதி நேரம் மற்றும் அஞ்சல்வழி பட்டப்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு என படிக்கத் துவங்கினார். இதுவரை 24 பட்டங்களைப் பெற்றுள்ளார். ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 பட்டப்படிப்புகளை முடித்தவர் ஓய்வுபெற்றதற்குப் பிறகு 12 பட்டப்படிப்புகளைப் படித்து சாதனை படைத்திருக்கிறார். தனது 25வது பட்டப்படிப்புக்காக முதுகலை போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்கிற பாடப்பிரிவைத் தேர்வுசெய்து, மயிலாடுதுறையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துவிட்டு, அதற்கான பாடப்புத்தகங்களைப் பெற்றுக்கொண்டவருக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி சால்வை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தார்.

 

Age is not a barrier to study ... An old man who applied for the 25th degree at the age of 82!

 

 

Age is not a barrier to study ... An old man who applied for the 25th degree at the age of 82!

 

இதுகுறித்து குருமூர்த்தி கூறுகையில், "கற்றது கையளவு, கல்லாதது உலக அளவு என்பார்கள். படிப்பதற்கு வயது ஒரு தடையில்லை. நேரம் தவறாமை மற்றும் திட்டமிடல் ஆகியவையே எனது படிப்புக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. திருமணம் செய்துகொள்ளாமலேயே படிக்கிறேன். இளைய தலைமுறையினர் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூழ்கி நேரத்தை வீணடிப்பதுடன் வாழ்வை இழக்கின்றனர். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே இருக்கிற நாட்கள்தான் வாழ்க்கை. அந்த வாழ்க்கையை அர்த்தத்துடன் வாழ வேண்டும், வாழ்க்கையை சாதாரணமாக கடந்து செல்லக் கூடாது என்பதை எனக்கு இதுபோன்ற படிப்புகள் கற்பிக்கிறது." என்கிறார் எண்பத்து இரண்டு வயதான இளைஞர்.

 

 

Next Story

பலத்த போலிஸ் பாதுகாப்போடு குழாய் பதிக்கும் ONGC -மீண்டும் பதற்றமாகும் கதிராமங்கலம்

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

கரோனா ஊரடங்கை சாதகமாக்கிக்கொண்டு கதிராமங்கலத்தில் குழாய் பதிக்கும் பணியை துவங்கியிருக்கிறது ஓ.என்.ஜி.சி. அந்த பணிகளை பார்க்க சென்றவர்கள் மீது, ஊரடங்கை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு, 6 பேரை கைது செய்து விடுவித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக நடந்த போராட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியாது. ஒட்டுமொத்த கிராமமும் வருடக்கணக்கில் போராடியது. பலபேர் மீது வழக்குப்பதியபட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. கரோனா ஊரடங்கால் போராட்டத்தை சற்று கைவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், கதிராமங்கலம் கடைவீதி பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கச்சா எண்ணெய் எடுத்து செல்லும் இரும்பு குழாயில் பழுதடைந்த குழாய்களை மாற்றி அமைப்பதற்காக ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு பணியை துவங்கினர். அதனை கேள்விப்பட்டு பார்வையிடுவதற்காக கடை வீதிக்கு வந்த கதிராமங்கலம் போராட்ட குழுவை சேர்ந்த திமுக கிளை செயலாளர் ராஜு மற்றும் ராஜாராமன், கஸ்தூரி தேவேந்திரன் மகேஸ்வரி, கலையரசி ஆகியோரை ஊரடங்கைமீறி ஒன்று கூடியதாக போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பானது.

"ஓ.என்.ஜி.சி. குழாய்களை மாற்ற வேண்டியது மிக அவசியமான ஒன்று. பழுதான குழாய்கள் தொடர்ந்து இருந்தால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பதால் மக்களின் பாதுகாப்பு கருதி குழாய்கள் மாற்றுகிறோம்" என்கிறார்கள் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள்.

போராட்டக்களத்தில் இருப்பவர்களோ, "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சனை துவங்கியதே அந்த இடத்தினாலதான். மீண்டும் அங்கு போலிஸ் பாதுகாப்போடு ஊரடங்கு காலத்தில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் ராட்சத குழாய்களை பதிப்பது என்ன நியாயம், நாங்கள் கூட்டமாககூட போகவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்கத்தான் தனித்தனியாக போனோம். ஏதோ நாங்க பெரும் குற்றம் செய்துவிட்டதாகவும், ஊரடங்கை மீறிவிட்டதாகவும் கைது செய்யுறாங்க" என்கிறார்கள் ஆத்திரம் பொங்க.

ஆறு பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டுசென்று, இரவு ஆனதும் விடுவித்தனர். இதற்கிடையில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன்  இன்று 4ஆம் தேதி குழாய்கள் மாற்றும் பணி நடந்து வருகிறது.

"ஊரடங்கை சாதகமாக்கிக் கொண்டு, ஓ.என்.ஜி.சி.க்கு ஆதரவாக காவல்துறை மீண்டும் அடாவடியை கட்டவிழ்க்க நினைக்கிறது" என பொதுமக்கள் வேதனை படுகின்றனர்.