Advertisment

தேனீக்கள் கொட்டி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 36 பேர் காயம்..! 2 பள்ளிகளுக்கு விடுமுறை..!!

nellai

நெல்லை டவுணில் உள்ளது ஜவஹர் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி. இந்தப் பள்ளி மரத்தில் நீண்ட நாட்களாக இருந்த தேன்கூடு இன்று காலை காற்றில் கலைந்ததால், தேனீக்கள் வெளியேறி பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் கொட்டியது. இதில் 31 மாணக்கர்களும், 5 ஆசிரியர்களும் காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்த மாணக்கர்களும், ஆசிரியர்களும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

Advertisment

nellai

இதைத்தொடர்ந்து, நிரந்தரமாக தேன்கூட்டை அகற்ற நினைத்த மாவட்ட நிர்வாகமோ, "ஜவஹர் பள்ளிக்கும், அதனருகிலுள்ள கல்லணைப் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும்." இன்று ஒரு நாள் விடுமுறை அளித்ததோடு மட்டுமில்லாமல் தீயணைப்புத்துறையினரைக் கொண்டுதேன்கூட்டை அகற்றும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றது.

Advertisment
school
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe