Skip to main content

ஈரோட்டில் பெற்றோரை இழந்த 338 குழந்தைகள்... காரணம் கரோனா!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

 338 children who lost their parents in Erode alone ... because Corona!

 

உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளது. கரோனாவால் ஏராளமானோர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். பலர் தங்களது உறவினர்களை, சொந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். தமிழகத்திலும் கரோனா பாதிப்பால் பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான குழந்தைகள் தங்களது தாய் அல்லது தந்தை அல்லது இரண்டு பேரையும் இழந்து ஆதரவற்றவர்களாக இருக்கின்றனர். 

 

அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே  தமிழக அரசு கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்குத் தனித்துவமாக உதவித்தொகை வழங்கி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 338 குழந்தைகள் கரோனாவால் தங்களது  பெற்றோர்களை இழந்துள்ளனர். இதில் 327 குழந்தைகள் தங்களது பெற்றோரில் தாய் அல்லது தந்தையை கரோனா காரணமாக இழந்துள்ளனர். 11 குழந்தைகள் ஏற்கனவே தனது பெற்றோர்களில் தாய் அல்லது தந்தையை விபத்து, தற்கொலை, உடல்நலக்குறைவு என பல்வேறு காரணங்களால் இழந்திருந்தனர். தற்போது இவர்களின் பெற்றோரில் ஒருவர் (தாய் அல்லது தந்தை) கரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். அதன் மூலம் இந்த 11 குழந்தைகள் தாய், தந்தையை என இருவரையும் இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

 

 338 children who lost their parents in Erode alone ... because Corona!

 

இதுகுறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியாதேவி கூறும்போது, "ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 338 குழந்தைகள் கரோனா தாக்கம் காரணமாக தங்களது பெற்றோர்களில் ஒருவரை இழந்துள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் 11 குழந்தைகள் ஏற்கனவே பல்வேறு காரணங்களால் தங்களது பெற்றோரில் ஒருவரை இழந்து உள்ளனர். தற்போது இவர்களின் பெற்றோர்களில் ஒருவர் கரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் 11 குழந்தைகள் தற்போது தாய், தந்தை இல்லாமல் உறவினர்கள் ஆதரவுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த 11  குழந்தைகளில் முதற்கட்டமாக 4 குழந்தைகளுக்கு அரசின் சார்பில் ஏற்கனவே தலா ரூபாய் 5 லட்சம் வீதம் ரூபாய் 20 லட்சம் அவர்களது பெயரில் வைப்பு நிதித் தொகையாக வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 18 வயது பூர்த்தி ஆனதும் முதிர்வுத் தொகை வட்டியுடன் கிடைக்கும். 

 

மேலும் இவர்களுக்கு மாதம் மாதம் அரசு சார்பில் ரூபாய். 3 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 11 குழந்தைகளில் 4 குழந்தைகளுக்கு ஏற்கனவே உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கரோனாவால் தங்களது பெற்றோர்களில்  ஒருவரை இழந்த 327 குழந்தைகளில் 14 குழந்தைகளுக்கு அரசு சார்பில் தலா 3 லட்சம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள குழந்தைகளுக்கு படிப்படியாக அரசின் சார்பில் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது." என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.