மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவரது மூன்று பெண் குழந்தைகளுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கிட 30 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என ரேஸ்கோர்ஸ் காலனி பகுதியில் உள்ள சேத்தனா மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதோடு, மாற்றுச் சான்றிதழை தர மறுப்பதால் பள்ளி வளாகத்திலேயே குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதிகாரியின் நேரடி உதவியாளர் நம்மை சந்திக்கவிடாமல் சார் இல்லை மாலை வாங்க என்று நம்மை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தார். தற்போது போலிஸார் தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் மிரட்டுவதாக அவர்களின் உறவினர்கள் கூறினர். பள்ளி நிர்வாகத்தோடு மாவட்ட கல்வி அதிகாரியும் சேர்ந்து டி.சி.கொடுக்க மறுத்து வருவதொடு எங்களை மிரட்டவும் செய்கின்றனர். எங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்வி குறியாக இருக்கிறது என்னசெய்வதென்று தெரியவில்லை என்கின்றனர் அந்த பெற்றோர்.