Skip to main content

டிசி கொடுக்க 30 ஆயிரம்... குடும்பத்துடன் பள்ளிமுன்பு தர்ணா!

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

 

மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவரது மூன்று பெண் குழந்தைகளுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கிட 30 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என ரேஸ்கோர்ஸ் காலனி பகுதியில் உள்ள சேத்தனா மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதோடு, மாற்றுச் சான்றிதழை தர மறுப்பதால் பள்ளி வளாகத்திலேயே குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டனர். 

33 thousand for give TC... parents protest in front of school


இதுகுறித்து பத்திரிக்கையார்கள் பள்ளி நிர்வாகத்தில் கேட்டபோது, யாரிடமும் பதில் சொல்லதேவையில்லை யாரிடம் சொல்லனுமோ அவர்களிடம் சொல்லிவிட்டோம் என்றனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி சாமிநாதனிடம்  கேட்டோம் அவரும் அதற்கு பதில் அளிக்காமல் நேரடியாக வரவும் என்றார். நாம் நேரடியாக போனபோது அங்கு சம்மந்தபட்ட சேத்தனா பள்ளியின் முதல்வரும், ஆசிரியரும் வந்து அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்தனர்.

 

 

33 thousand for give TC... parents protest in front of school


அதிகாரியின் நேரடி உதவியாளர் நம்மை சந்திக்கவிடாமல் சார் இல்லை மாலை வாங்க என்று நம்மை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தார். தற்போது போலிஸார் தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் மிரட்டுவதாக அவர்களின் உறவினர்கள் கூறினர். பள்ளி நிர்வாகத்தோடு மாவட்ட கல்வி அதிகாரியும் சேர்ந்து டி.சி.கொடுக்க மறுத்து வருவதொடு எங்களை மிரட்டவும் செய்கின்றனர். எங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்வி குறியாக இருக்கிறது என்னசெய்வதென்று தெரியவில்லை என்கின்றனர் அந்த பெற்றோர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.