Skip to main content

பாடுபட்டு பயிரிட்ட நெல்லை அறுவடை செய்ய மணிக்கு ரூ.3000 ; மன உளைச்சலுக்கு ஆளான விவசாயிகள்!

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் வீராணம் ஏரியின் மூலம் பாசனம் பெற்று 15000 ஏக்கருக்கு மேல் சம்பா நெல் பயிரிடப்பட்டுள்ளது. பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த போது விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்திய போது மாவட்ட ஆட்சியர் தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் மற்றும் வேளாண் துறை அலுவலர்களையும் அழைத்து விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரத்தை ஒரு மணி நேரத்திற்கு டயருடன் கூடிய அறுவடைக்கு ரூ 1200 முதல் 1300 வரையும், பெல்ட் போட்ட நெல் அறுவடை இயந்திரத்திற்கு 1500 லிருந்து 1800 வரை கூலி நிர்ணயம் செய்து உத்தரவிட்டார்.

 

cuddalore


பின்னர் இதனை அவரது அறிக்கையாகவும் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வேளாண்துறை துறை அதிகாரிகள் சரியான முறையில் விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரங்களை ஏற்பாடு செய்து கொடுக்காததால் நெல் அறுவடைக்கு முன் விதைத்த உளுந்து செடிகள் வளர்ந்து இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடை செய்யும்போது உளுந்து செடிகள் வீணாகி உள்ளது.

மேலும் நெல் அறுவடை இயந்திரம் சரியான நேரத்தில் கிடைக்காததால் அறுவடை செய்ய தயாரான நிலையில் காலதாமதத்தால் நெல் மணிகள் உதிர்ந்து விட்டது. கொஞ்ச நெஞ்சம் இருந்த நெற்கதிர்களை அறுக்க ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 3000 வரை தனியார் நெல் அறுவடை இயந்திரங்களை கொண்டு விவசாயிகள் அறுவடையை செய்து வருகிறார்கள். பாடுபட்டு பயிரிட்ட நெல்லை அறுவடை செய்ய மணிக்கு 3000 ஆயிரம் ரூபாய் செலவு செய்யவேண்டியுள்ளது. இது பலவிதத்தில் வேதனையுடன் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது எனக்கூறினர் விவசாயிகள்.

 

cuddalore


இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் அருகே நங்குடி என்ற கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று விவசாயிகளுக்கு குறைந்த கட்டணத்தில் நெல் அறுவடை செய்வதற்கு மானியத்துடன் கடன் பெற்று 10- க்கும் மேற்பட்ட நெல் அறுவடை இயந்திரங்களை வைத்துள்ளது. அவர்களும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட தொகையை வசூலிக்காமல் விவசாயிகளிடம் ரூ 3000 வரை ஒரு மணி நேரத்துக்கு நெல் அறுவடை செய்ய வசூலித்ததாக வீராணம் ஏரியின் பாசன விவசாயிகள் சங்க தலைவர் பாலு குற்றம் சாட்டுகிறார். 

எனவே இதுபோன்ற காலங்களில் விவசாய பொறியியல் துறை அதிகாரிகள் மற்ற மாவட்டங்களில் உள்ள நெல் அறுவடை இயந்திரங்களை தேவைப்படும் இடத்திற்கு வரவழைத்து டெல்டாபகுதி விவசாயிகளுக்கு உதவ வேண்டும். ஆனால் இதுபோன்று வரும் காலங்களில் நெல் அறுவடை இயந்திரத்திற்கு தட்டுப்பாடு இல்லாமல் அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் உதவ வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.