Skip to main content

ஆற்றங்கரையோரம் 3000க்கும் மேற்பட்ட ஆதரர் கார்டுகள் வீச்சு... திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

திருவாரூரை அடுத்த திருத்துறைப்பூண்டியில் முள்ளியாற்று கரையோரம் சுமார் 3000 க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் மூட்டையில் கட்டி வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

adar card

 

முள்ளியாற்று கரையோரம் வீசப்பட்ட அந்த ஆதார் அட்டைகளை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில் அந்த அட்டைகள் கட்டிமேடு, ஆதிரங்கம்,வடபாதி கிராமத்தினரின் ஆதார அட்டைகள் என தெரியவந்துள்ளது.

 

யார் இப்படி ஆதார் அட்டைகளைவீசி சென்றது. இதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதாக என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தலைவருக்காக உயிரையே கொடுப்பேன்” - முதல் ஆளாக ராஜினாமா செய்த திமுக நகரச் செயலாளர்! 

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

"I will give my life for the leader" - DMK city secretary who was the first to resign!

 

"கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து சந்திக்க வேண்டும்" என அதிரடி அறிக்கை விட்டிருந்தார் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

 

முதல்வர் ஸ்டாலின் உத்தரவை அடுத்து முதல் ஆளாக துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ‘தலைவர்தான் எங்களுக்கு உயிர்.. அவருக்காக உயிரையும் கொடுப்போம்’ என திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் பேசியது சமுக வளைதளங்களில் வைரலாகிவருகிறது.

 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் திமுக கூட்டணி 21 வார்டுகளை கைப்பற்றியது. இதில் 5வது வார்டில் போட்டியிட்ட திமுக நகர செயலாளர் ஆர்,எஸ்,பாண்டியன் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தள்ளுபடியானதால் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். இந்த சூழலில் நகர்மன்றத் தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் 4ம் தேதி நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி நகராட்சியின் துணை தலைவர் பதவியை கூட்டணிக்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது திமுக தலைமை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை சேர்மனுக்கான வேட்பாளராக ராமலோக ஈஸ்வரியை நிறுத்தியது.

 

"I will give my life for the leader" - DMK city secretary who was the first to resign!

 

இந்தநிலையில் 4ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி காலையில் நடத்த தலைவருக்கான தேர்வில் கலந்துகொள்ளாததால், அதிமுகவினர் சந்தடி சாக்கில் உள்ளே புகுந்துவிட வாய்ப்பு இருப்பாதக கருதிய திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திமுக நகர செயலாளர் பாண்டியனையே துணை தலைவருக்கு பரிந்துறை செய்தனர். மாலை நடந்த மறைமுக தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்று நகராட்சியை திமுகவே தக்கவைத்தது.


இந்தநிலையில் திமுக தலைவரின் அறிவிப்பை தொடர்ந்து முதல் ஆளாக ராஜினாமா செய்திருக்கிறார் திமுக நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன். மேலும் அவர் பேசிய வீடியோவில், "நகர திமுக செயலாளராகிய நான் ஒரு கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன். இன்று மாலை எங்களுடைய வணக்கத்திற்குரிய தலைவர், வாழ்நாள் தலைவர், வணக்கத்திற்குரிய எங்களின் மேன்மைமிகு அண்ணன் தமிழக முதல்வர் தலைவர் தளபதி அவர்கள் ஒரு அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள்.

 

கூட்டணி கட்சியினருக்கு விட்டுக்கொடுத்துள்ள இடங்களில் போட்டியிடக்கூடாது என்கிற ஒரு சாராம்சத்தை சொல்லியிருக்கிறார். அதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் அவரது உத்தரவை மீறவில்லை, இன்று காலையில் நடைபெற்ற நகராட்சித் தலைவர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி பங்கு பெறவில்லை. அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராமலோக ஈஸ்வரி என்பவர் நகர் மன்றத் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. அந்த ஒரு காரணத்திற்காகவும், சந்தடி சாக்கில் அதிமுக புகுந்துவிடக்கூடாது என்பதாலும், இன்று மாலை நடந்த நகர்மன்றத் துணைத் தலைவர் தேர்தலுக்காக நகர செயலாளராகிய என்னை திமுக, காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 21 உறுப்பினர்களும் என்னை போட்டி போட சொன்னார்கள். நான் அதில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டேன்.


எங்கள் தலைவருக்கு ஒரு பங்கம் என்றால் எனக்கு இந்த பதவி முக்கியமல்ல, உயிரை கூட கொடுப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் தயாராக இருக்கிறோம்.  எனவே இந்த பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்தகடிதத்தை தலைவரிடத்தில் வழங்குவேன், அவர் எங்கு கொடுக்க சொல்கிறாரோ, அங்கு ஒப்படைப்பேன். தலைவர் என்றால் எங்களுக்கு உயிரு, தலைவருக்காக இதனை மனபூர்வமாக செய்கிறேன்" என கூறியிருக்கிறார்.


நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியனின் இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

 

 

Next Story

பெண் வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு...!

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

Petrol bomb blast at Marxist Communist candidate's house

 

திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகராட்சியில் துணைத் தலைவர் வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமலோக ஈஸ்வரி என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசி தங்களை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாக வேட்பாளர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.