Skip to main content

இருசக்கர வாகனத்தில் வந்து  30 லட்சம் கொள்ளை!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

30 lakh robbery on a two-wheeler!

 

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள சார்பாய் புதூர் ஊரில் ஊறுகாய் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார் முகமது உசேன்(37). இவரது கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருபவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா(31). இவர்கள் இருவரும் திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், மேல்மலையனூர் பகுதிகளில் வெள்ளரிப் பிஞ்சுகளை மொத்தமாக வாங்கி தங்கள் கம்பெனிக்குக் கொண்டு சென்று ஊறுகாய் தயாரித்து வந்தார்கள். அதன்படி நேற்று மாலை தலைவாசல் பகுதியில் இருந்து காரில் ராஜா கேஷியர் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் முறுக்கேறி பகுதியில் தங்கள் முதலாளிக்குச் சொந்தமான பண்ணையைப் பார்த்துவிட்டு வெள்ளரிப்பிஞ்சு கொள்முதல் செய்வதற்கு முன்பணம் கொடுப்பதற்கு 30 லட்ச ரூபாய் பணத்துடன் வந்துள்ளனர்.

 

அவர்களது கார் மணக்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். காலை 9 மணியளவில் திண்டிவனம் அருகே உள்ள பெருமுக்கல் ஏரிக்கரை அருகே அவர்கள் கார் சென்று கொண்டிருந்தபோது 3 இருசக்கர வாகனத்தில் 8பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்கள் காரை வழிமறித்தது. இருசக்கர வாகனத்தில் வந்த அந்தக் கும்பல் மாஸ் ஹெல்மெட் அணிந்துகொண்டு காரின் கண்ணாடியை உடைத்துள்ளது. பின்னர் மேலாளரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் பையில் வைத்திருந்த 30 லட்ச ரூபாயைப் பறித்துக்கொண்டு அவர்கள் வந்த பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ராஜா மற்றும் அவருடன் வந்தவர்கள் கொள்ளையர்கள் குறித்துக் கத்தி சத்தம் போட்டுள்ளனர். அதற்குள் கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

 

தகவலறிந்த விழுப்புரம் எஸ்.பி. நாதா, இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் உள்ளிட்ட தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பணத்தைப் பறிகொடுத்த ராஜா மற்றும் உடன் வந்த அனைவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது ராஜா, “உளுந்தூர்பேட்டையில் இருந்து எங்கள் காரை பைக்கில் பின் தொடர்ந்து வந்தனர். பெருமுக்கல் அருகே திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் எங்கள் காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து கத்தி முனையில் பணத்தைப் பறித்துச் சென்றனர்” என்று கூறினார். இதையடுத்து கொள்ளைக் கும்பலைப் பிடிப்பதற்காக போலீசார் ஆங்காங்கே திடீர் வாகன சோதனை நடத்தினர். ஆனால் நேற்று மாலை வரை கொள்ளை கும்பல் குறித்து எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.