Skip to main content

தமிழக- கேரள எல்லையில் சிக்கிய 30 மூட்டை குட்கா புகையிலை!

Published on 31/08/2020 | Edited on 01/09/2020

 

30 bags of Gutka tobacco found on Tamil Nadu-Kerala border

 

தமிழகத்தில் தீபாவளியைப் போன்று விமரிசையாகக் கொண்டாடப்படுவது, கேரளாவில் ஓணம் பண்டிகை. மகாராஜா மாவலியை வரவேற்கும் பொருட்டு ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளன்று கேரளா மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு புத்தாடை புனைந்து அத்தப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கோலமிட்டு வரவேற்பார்கள். அதுவே ஓணம் பண்டிகையானது.

அன்றைய தினம் பாகுபாடின்றி கேரள மக்கள் வீடுகளில், 16 வகை விருந்துகள் கம கமக்கும், மாநிலமே கொண்டாட்டத்திலிருக்கும். குண்டுசி முதல் காதுகளில் அணியப்படும் தங்கத் தோடுகள் வரை வியாபாரம் அமர்க்களப்படும்.

இந்த அமர்க்களத்தைப் பயன்படுத்திக் கொண்டு தடை செய்யப்பட்ட கிக் சமாச்சாரமான புகையிலை குட்காவும் டன் கணக்கில் தமிழக பார்டரைக் கிராஸ் செய்து விடுகின்றன. கரோனா தொற்று காரணமாக நாடே பூட்டப்பட்ட லாக் டவுணிலிருக்கிறது. மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம். ஆனாலும் சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடில்லை. மேலும் கரோனாத் தொற்று அச்சம் காரணமாக சரக்கு வாகனங்கள் அவ்வளவாக நுண்ணிய சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை.

 

எனவே வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கர்நாடகாவிலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகளை, டன் கணக்கில் தமிழகத்திற்குள் நுழைந்து விடுகின்றனர். அதுபோன்று கடத்தப்பட்ட குட்கா புகையிலை நெல்லை, தூத்துக்குடி, ஆலங்குளம், சுரண்டை ஏரியாக்களில் பிடிபட்டுள்ளன. பல இடங்களில் பதுக்கியும் வைக்கப்பட்டுள்ளன. அது போன்று பதுக்கி வைக்கப்பட்டதில் சில தென்காசி மாவட்ட கேரள பார்டரான புளியரை வழியாக உள்ளே கடத்தப்பட்டும் விடுகின்றன.


நேற்று அதிகாலை கேரளா பார்டரில், ஆரியங்காவு சோதனைச் சாவடியில் கேரள போலீசார் சோதனையிலிருந்த போது, ஆற்றிங்கல் செல்வதற்காக வந்த கோழித் தீவனம் ஏற்றி வந்த வாகனத்தை சோதனை செய்தனர். மேலும், வாகனத்தில் உள்ள மூட்டைகளின் அடியில் மூட்டை மூட்டையாகக் குட்கா புகையிலை மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கைப்பற்றிய போலீசார், வாகனத்தையும் பறிமுதல் செய்து அதன் டிரைவரான தென்காசி நகரின் இசக்கி ராஜனையும்  கைது செய்தனர்.

 

Ad


இதுகுறித்து அறியங்காவு சோதனைச் சாவடி போலீசார் கூறுகையில், பிடிபட்ட 30 மூட்டைகளின் குட்கா மதிப்பு 25 லட்சம். மேலும், இது தமிழகத்திலிருந்து கடத்தப்பட்டதாகத் தெரிவித்த போலீசார், வழக்குப்பதிவு செய்து உயரதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.


கரோனா லாக்டவுண் காலத்தில் தடை செய்யப்பட்டவைகள் கூட தாராள மயமாகியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.