Skip to main content

சென்னையில் 3 வயது சிறுமி கடத்தல்... பணிப்பெண்ணே காதலனுடன் சேர்ந்து கடத்தியது அம்பலம்!

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

சென்னையில் 3 வயது சிறுமி வீட்டில் பணிபுரியும் பண்பெண்ணால் கடத்தப்பட்டு 60 லட்சம் தொகை கேட்டு மிரட்டப்பட்ட நிலையில் அந்த சிறுமி 10 மணிநேரத்தில் மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை அமைந்தகரை செனாய் நகரை அருள்ராஜ்-நந்தினி தம்பதியர். தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களாக பணியாற்றிவரும் இவர்களுக்கு அன்விகா ஒரு பெண்குழந்தை உள்ளது. அன்விகா முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்கேஜி படித்துவந்துள்ளார். இவர்கள் வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டு வேலைகளை பார்த்துக்கொள்ள அம்பிகா என்ற பெண் பணிப்பெண்ணாக சேர்ந்துள்ளார். நேற்று மாலை அன்விகாவை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த அம்பிகாவிடம் குழந்தையை பார்த்துக்கொள்ளும்படி தாய் நந்தினி கூறிவிட்டு வீட்டில் இருந்த மற்ற வேலைகளை செய்துள்ளார்.

3-year-old girl abducted incident in Chennai


சிறிதுநேரம் கழித்து பார்த்தபோது மகளும் அந்த பணிப்பெண்ணான அம்பிகாவையும் காணவில்லை. வீட்டிலும், வீட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. சிறிதுநேரம் கழித்து பணிப்பெண் அம்பிகாவின் போனில் இருந்து நந்தினிக்கு கால் வந்த்துள்ளது. அதில் பதற்றத்துடன் பேசிய அம்பிகா தன்னையும், குழந்தையையும் மர்ம நபர்கள் கடத்திவிட்டார்கள் எங்களை காப்பாற்றுங்கள் என அழுதுள்ளார். இந்த தகவலை நந்தினி அவரது கணவனிடம் சொல்ல திரும்பவும் அம்பிகா எண்ணில் இருந்து கால் வர அதில் பேசிய ஆண் நபர் ஒருவர் 60 லட்சம் பணம் கொடுத்தால் உன் குழுந்தையை தருகிறேன் இல்லையென்றால் உயிரோடு விடமாட்டேன் என மிரட்டியுள்ளான்.

 

3-year-old girl abducted incident in Chennai


இதனால் பயந்துபோன இருவரும் அமைந்தகரை போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அதனையடுத்து போலீசார் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை சோதித்து பார்த்தனர். அதுமட்டுமின்றி பணிப்பெண் அம்பிகாவின் மொபைல் சிக்னலை கண்காணித்து வந்தனர்.  அப்போது அம்பிகாவின் செல்லில் இருந்து மற்றோரு எண்ணுக்கு அடிக்கடி அழைப்பு சென்றது கண்டுபிக்கப்பட்டது. அந்த எண்ணை கொண்டு விசாரித்ததில் அந்த எண் முகமது கரிமுல்லா சயீத் என்பவருடைய எண் எனத் தெரியவந்தது. 

kidnap


நெற்குன்றம் அடுத்த பாலவாயல் என்ற இடத்தில் இருந்த அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புழலில் கேஎப்சியில்  மேலாளராக உள்ள சயீத் அவனது காதலியான அம்பிகாவை வைத்து குழந்தையை கடத்தி பணவசதி படைத்த அந்த மருத்துவ தம்பதியிடம் பணம் கேட்க இருவரும் கூட்டு சேர்ந்து குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதில் சயீத் கைது செய்யப்பட்டதையடுத்து சென்னை அடுத்த கோவலத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அம்பிகாவையும் கைது செய்து குழந்தை அன்விகாவை சுமார் 10 மணிநேரத்திற்கு பின் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர் போலீசார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.