Skip to main content

சென்னையில் 3 வயது சிறுமி கடத்தல்... பணிப்பெண்ணே காதலனுடன் சேர்ந்து கடத்தியது அம்பலம்!

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

சென்னையில் 3 வயது சிறுமி வீட்டில் பணிபுரியும் பண்பெண்ணால் கடத்தப்பட்டு 60 லட்சம் தொகை கேட்டு மிரட்டப்பட்ட நிலையில் அந்த சிறுமி 10 மணிநேரத்தில் மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை அமைந்தகரை செனாய் நகரை அருள்ராஜ்-நந்தினி தம்பதியர். தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களாக பணியாற்றிவரும் இவர்களுக்கு அன்விகா ஒரு பெண்குழந்தை உள்ளது. அன்விகா முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்கேஜி படித்துவந்துள்ளார். இவர்கள் வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டு வேலைகளை பார்த்துக்கொள்ள அம்பிகா என்ற பெண் பணிப்பெண்ணாக சேர்ந்துள்ளார். நேற்று மாலை அன்விகாவை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த அம்பிகாவிடம் குழந்தையை பார்த்துக்கொள்ளும்படி தாய் நந்தினி கூறிவிட்டு வீட்டில் இருந்த மற்ற வேலைகளை செய்துள்ளார்.

3-year-old girl abducted incident in Chennai


சிறிதுநேரம் கழித்து பார்த்தபோது மகளும் அந்த பணிப்பெண்ணான அம்பிகாவையும் காணவில்லை. வீட்டிலும், வீட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. சிறிதுநேரம் கழித்து பணிப்பெண் அம்பிகாவின் போனில் இருந்து நந்தினிக்கு கால் வந்த்துள்ளது. அதில் பதற்றத்துடன் பேசிய அம்பிகா தன்னையும், குழந்தையையும் மர்ம நபர்கள் கடத்திவிட்டார்கள் எங்களை காப்பாற்றுங்கள் என அழுதுள்ளார். இந்த தகவலை நந்தினி அவரது கணவனிடம் சொல்ல திரும்பவும் அம்பிகா எண்ணில் இருந்து கால் வர அதில் பேசிய ஆண் நபர் ஒருவர் 60 லட்சம் பணம் கொடுத்தால் உன் குழுந்தையை தருகிறேன் இல்லையென்றால் உயிரோடு விடமாட்டேன் என மிரட்டியுள்ளான்.

 

3-year-old girl abducted incident in Chennai


இதனால் பயந்துபோன இருவரும் அமைந்தகரை போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அதனையடுத்து போலீசார் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை சோதித்து பார்த்தனர். அதுமட்டுமின்றி பணிப்பெண் அம்பிகாவின் மொபைல் சிக்னலை கண்காணித்து வந்தனர்.  அப்போது அம்பிகாவின் செல்லில் இருந்து மற்றோரு எண்ணுக்கு அடிக்கடி அழைப்பு சென்றது கண்டுபிக்கப்பட்டது. அந்த எண்ணை கொண்டு விசாரித்ததில் அந்த எண் முகமது கரிமுல்லா சயீத் என்பவருடைய எண் எனத் தெரியவந்தது. 

kidnap


நெற்குன்றம் அடுத்த பாலவாயல் என்ற இடத்தில் இருந்த அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புழலில் கேஎப்சியில்  மேலாளராக உள்ள சயீத் அவனது காதலியான அம்பிகாவை வைத்து குழந்தையை கடத்தி பணவசதி படைத்த அந்த மருத்துவ தம்பதியிடம் பணம் கேட்க இருவரும் கூட்டு சேர்ந்து குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதில் சயீத் கைது செய்யப்பட்டதையடுத்து சென்னை அடுத்த கோவலத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அம்பிகாவையும் கைது செய்து குழந்தை அன்விகாவை சுமார் 10 மணிநேரத்திற்கு பின் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர் போலீசார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.