ADVERTISEMENT

ராயபுரத்தில் 3 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!

10:28 AM Jun 02, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 63 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT


சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம், திரு.வி.க நகர் மணிடலங்களில் கரோனா பாதிப்பு என்பது அதிகமாக இருந்து வருகின்றது. ராயபுரம் மண்டலத்தில் அதன் பாதிப்பு என்பது மிக அதிகாமாக இருந்து வருகின்றது. இதுவரை 2,935 பேருக்கு அங்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT