Skip to main content

"3 முறை துப்பாக்கிச் சத்தம்... என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடி மணிகண்டனின் பின்னணி..!"

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

கடந்த ஜூன் 15-ந்தேதி சென்னையில் ரவுடி வல்லரசுவை என்கவுன்டரில் போலீஸார் சுட்டுக் கொன்றனர். அதன்பிறகு சரியாக 101-வது நாளில் மீண்டும் துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தாதாவாக திகழ்ந்த மணிகண்டனுக்கு, தோட்டா மூலம் முடிவுரை எழுதியிருக்கின்றனர் தனிப்படை போலீஸார்

யார் இந்த மணிகண்டன்?

விழுப்புரம் மாவட்டம் குயிலாபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டப்பஞ்சாயத்து, கஞ்சாவிற்பனை, பெண்களை வைத்து பாலியல் தொழில், ரவுடியிசம், கூலிக்கு கொலை என சகலத்திலும் கொடிகட்டி பறந்ததால், பெயருக்கு முன்னால் தாதா என்ற அடைமொழி ஒட்டிக் கொண்டது.

rowdy


இவருக்கு போட்டியாக பூபாலன் என்பவரும் களத்தில் இறங்க, 2 தரப்பிலும் பல கொ(த)லைகள் விழுந்தன. விழுப்புரம் எஸ்.பியாக இருந்த நல்லசிவம், பெரிய்யா, அமல்ராஜ் ஆகியோர் இரு தரப்பையும் எச்சரித்தாலும் சட்டவிரோத செயல்களும் தொடர்ந்தன. இதனால், மணிகண்டன் மீது ஆரோவில், மயிலம், கோட்டக்குப்பம், செஞ்சி, திருவண்ணாமலை என பல்வேறு காவல் நிலையங்களில் 8 கொலை வழக்கு உட்பட 28 வழக்குகள் பதிவாகின.

2010-ஆம் ஆண்டு மணிகண்டனின் தம்பி ஆறுமுகத்தை பூபாலன் தரப்பு கூலிப்படையை ஏவி கொலை செய்தது. இதன்பிறகும் தாதா மணிகண்டனின் குற்றச்செயல்கள் அதிகரித்தன. இதனால், 'என்கவுன்டர் 'லிஸ்ட்டில் அப்போதே மணிகண்டன் பெயர் சேர்க்கப்பட்டது.

 

rowdy


உயிருக்கு பயந்து தாம் திருந்தி வாழப் போவதாக  2015-ல் அப்போதைய எஸ்.பி அமல்ராஜை நேரில் சந்தித்து மனு கொடுத்தார் மணிகண்டன். 'நான் எந்த சட்ட விரோத செயலிலும் ஈடுபடவில்லை. ஆனால், என் பெயரை சொல்லி சிலர் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல், கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர். பூபாலன் குரூப் ஆரோவில்லில் பெண்களை வைத்து தொழில் செய்கின்றனர். ஆனால், அவர்கள் என் பெயரை பயன்படுத்துவதால், போலீஸார் என்மீது வழக்கு போட்டுள்ளனர். ஆகவே எஸ்பி ஐயாவை பார்த்து திரிந்து வாழ மனு கொடுத்துள்ளேன்'என அப்போது ஊடகங்களிடமும் தெரிவித்தார் மணிகண்டன்.

மீண்டும் சட்ட விரோத செயல்.?

பாடின வாயும், ஆடின காலும் சும்மா இருக்காது என்பதை போல், கொஞ்சநாள் ஒதுங்கியே இருந்த மணிகண்டன், மீண்டும் தாதா வேடம் பூண்டார். புதுச்சேரியில் கடந்த ஆண்டு 2018-ல் நடந்த முக்கிய காங். பிரமுகர் கொலை, ரியல் எஸ்டேட் பிரமுகர் ஒருவர் கொலையிலும் இவருக்கு தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.

அதன் அடிப்படையில் விழுப்புரம் போலீஸார் தேடி வந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு தான் சென்னை வந்து குடும்பத்துடன் வசித்துள்ளார். இன்று மாலை(24-09-201) விழுப்புரத்தில் இருந்து வந்த தனிப்படை போலீஸார், மணிகண்டன் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்துள்ளனர்.

 

rowdy


பின்னர் அவனை பிடிக்க முயன்றபோது, போலீஸாரை கத்தியால் வெட்ட முயன்றுள்ளான். இதனால், போலீஸார் தற்காப்புக்காக சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தான்.

 

rowdy


4 தளங்களை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் கீழ் தளத்தில் மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்துள்ளான். 6-15 மணியளவில் துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டதால், மேல் தளத்தில் வசித்தவர்கள் கீழே வந்து பார்த்துள்ளனர். அப்போது, கூட்டமாக இருந்த போலீஸார், மக்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்துள்ளனர். மொத்தம் 3 முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.