Skip to main content

பெண் தற்கொலை வழக்கில் 3 போலீசார் பணியிடமாற்றம்

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

3 policemen transferred in the case of female

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் மனைவி கோகிலா(36). இவர், கடந்த சனிக்கிழமை காலை தனது வீட்டில் சேலையில் தூக்கிட்டு சடலமாக தொங்கினார். அருகில் ஒரு நோட்டு தாளில் தன் மீது பொய் வழக்கு போட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். அதிகாலையில் வந்து இழுத்துச் சென்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தேன். இதனால் சாகிறேன் என்று எழுதப்பட்டிருந்தது.

 

இந்த சம்பவத்தில் கோகிலாவின் கணவர் நீலகண்டன் கொடுத்த புகாரில் திமுக பிரமுகர் எம்.எம்.குமார், அவரது மனைவி புவனேஸ்வரி, கீரமங்கலம் காவல் நிலையம் எஸ்.ஐ ஜெயக்குமார், பெண் போலீஸ் கிரேசி மற்றும் கீரமங்கலம் காமராஜ், நெய்வத்தளி துரைமாணிக்கம் என 6 பேர் தன் மனைவி தற்கொலைக்கு காரணமானவர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார்.

 

நடவடிக்கை கோரி உறவினர்கள், அரசியல் கட்சியினர் மேற்பனைக்காடு மற்றும் கீரமங்கலம் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் செய்தனர். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார் நீலகண்டன் கொடுத்த புகாரையும் பதிவு செய்தனர். ஆனால் கைது செய்யும் வரை பிரேதப் பரிசோதனைக்கு போகமாட்டோம் என்று கூறினார்கள். இந்த நிலையில், நேற்று அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ் கோகிலா வீட்டிற்கு விசாரணைக்கு வந்து காத்திருந்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கும் வரை விசாரணைக்கு வரவில்லை என உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.

 

தொடர்ந்து நேற்று மாலை அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். இந்த நிலையில் இன்று காலை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உறவினர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை சடலத்தை வாங்கமாட்டோம் என்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். போலீசார் மீதும் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும் என்பதை உறவினர்கள் கோரிக்கையாக முன் வைத்தனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கோட்டாட்சியர் உறுதி அளித்த பிறகு சடலத்தை பெற்றுக் கொண்டனர்.

 

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட கோகிலாவின் அருகில் இருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கீரமங்கலம் எஸ்.ஐ ஜெயக்குமார் மீமிசலுக்கும், பெண் போலீஸ் கிரேசி மணமேல்குடி, புவனேஸ்வரி நமணசமுத்திரம் ஆகிய காவல் நிலையத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை செய்யும் காவல் அதிகாரி மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.