Advertisment

ஆற்றில் நீராடிய 3 பேர் உயிரிழப்பு; ஆடிப் பெருக்கில் நிகழ்ந்த சோகம்

 3 people lost their life after swimming in the river; The tragedy happened on the day of Audi Peruku

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் குளித்த மூன்று பேர் ஆடிப்பெருக்கு நாளிலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகத்தின்பல நீர்நிலைகளில் குளித்து மக்கள் வழிபடுவது வழக்கமாகும். ஈரோடு மாவட்டம் பவானி, கொடுமுடி ஆகிய பகுதிகளில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆற்றில் இறங்கி மக்கள் குளித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் கொடுமுடி அருகேவெங்கப்பூர் பகுதியில் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பலர் குளிக்கச் சென்றனர். அதில் குப்புராஜ், ஜெகதீசன், 14 வயது சிறுமி உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தற்போது சிறுமியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இருவரின் உடலை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பைஏற்படுத்தி இருக்கிறது. ஆடிப்பெருக்கு நாளிலேயே ஆற்றில் நீராடிய மூன்று பேர் உயிரிழந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

rivers kodumudi Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe