Skip to main content

சுவர் விழுந்து 3 பேர் பலி - தொடரும் கூலி மக்களின் மரணங்கள்

Published on 03/03/2018 | Edited on 03/03/2018
police

 

திருவண்ணாமலை நகரில் திருவூடல் தெருவில் பில்லூரார் மடம் உள்ளது. இந்த மண்டபத்துக்கு அருகில் பல் மருத்துவர் சீனுவாசன் தனது இடத்தில் வீடு மற்றும் மருத்துவமனை கட்டுகிறார். இதற்கான பணிகளை கொத்தனார்கள் செய்து வருகின்றனர்.

 

2 ந்தேதி மதியம் பில்லர் போடுவதற்காக பள்ளம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பணியாளர்கள் வேலை செய்துக்கொண்டு இருந்த நிலையில் அருகில் இருந்த மடத்தின் ஒருப்பக்க சுவர் வேலை செய்துக்கொண்டு இருந்த கூலி ஆட்கள் மீது விழுந்துள்ளது. அதில் 4 பேர் அடியில் சிக்கியுள்ளனர். இதைப்பார்த்து மற்ற வேலையாட்கள் அதிர்ச்சியாகி, அழுதுக்கொண்டே கத்த பொதுமக்கள் ஓடிவந்து பார்த்துவிட்டு மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். 

 

அதோடு, தீயணைப்பு துறைக்கு தகவல் சொல்ல அவர்களும் சம்பவயிடத்துக்கு வந்து ஜே.சி.பி வைத்து இடிபாடுகளை அகற்றி அடியில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 4 பேரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதில் அலமேலு, கார்த்தி உட்பட மூவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

சம்பவம் நடந்த இடத்தை எஸ்.பி பொன்னி ம்ற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு விசாரித்துவிட்டு சென்றனர். கட்டிட உரிமையாளர் மீது வழக்கு பதிவுச்செய்யக்கோரி உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

இரண்டு மாதங்களுக்கு முன்பு மழை நீர் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டியபோது ரமணாஸ்ரமம் சுற்றுசுவர் விழுந்து தொழிலாளிகள் இருவர் இறந்தனர் என்பது குறிப்பிடதக்கது. 

 

பாதுகாப்பற்ற முறையில் தொழிலாளர்களை வேலைவாங்குவதால் தொழிலாளர் இறப்பு என்பது இந்த மாவட்டத்தில் சகஜமாகவுள்ளது. அரசு கண்டுக்கொள்ளுமா என்பதே பலரின் கேள்வி ?
 

சார்ந்த செய்திகள்

Next Story

உலக அளவில் விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் நாடுகளில் இந்தியா முதலிடம்!

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

 

India has the highest number of accident deaths in the world!

 

உலக அளவில் விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 

உலகளவில் ஒப்பிடும் போது, சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கையில் இந்தியாவின் நிலை என்ன? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில், ஜெனிவாவில் உள்ள 'சர்வதேச சாலை கூட்டமைப்பு' வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, விபத்துகள் அதிகம் நடக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 

 

சாலை விபத்துகளின் போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. காயமடைந்தவர்கள் எண்ணிக்கையின் படி, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 

 

நாடு முழுவதும் கடந்த 2020- ஆம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 69.80% பேர் 18 முதல் 45 வயதுடையோர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Next Story

“மலக்குழியில் மடியும் உயிர்கள்… தொடரும் வேதனை..!”

Published on 10/11/2018 | Edited on 10/11/2018
manual scavenjing


 

துப்புரவு சார்ந்த எந்த வேலையையும், அரசாங்கமே செய்யவேண்டும். இந்த பணியை ஒப்பந்தம் விடக்கூடாது. 2013-மனிதக் கழிவுகள் அகற்றும் பணி தடுப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி துப்புரவு தொழிலாளர்களின் மாண்புரிமைகள் பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 2014-ல் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்த தீர்ப்பு இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. இன்றும் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழப்புகள் தொடர்கிறது.  பாதாள சாக்கடை அடைப்புகளை இயந்திரம் கொண்டே சரி செய்ய வேண்டும், மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் இன்னும் காகித அளவிலே இருக்கிறது.

 

பெரிய தொழில் நிறுவனங்கள், உணவு விடுதிகளில் கழிவுநீர் அடைப்பை சரி செய்யவும், சுத்தம் செய்யவும் அடித்தட்டு மக்களே பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு முறையான மருத்துவ உபகரணங்கள், கையுறை, கால் உறை எதுவும் வழங்கப்படுவதில்லை. இதனால், மூச்சடிக்கி உள்ளே இறங்கும் தொழிலாளி சில சமயங்களில் மயங்கிச் சரிந்து மரணத்தை தழுவுவது வழக்கமாகிவிட்டது. கடந்த 3 ஆண்டில் மட்டும் தமிழகத்தில் விஷவாயு தாக்கி 278 பேர் இறந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.  இவ்வாறு இறக்கும் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு உடனடியாக 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். ஆனால், அந்த தொகைகூட இன்னும் பல குடும்பங்களுக்கு சென்று சேரவில்லை.

 

மலம் அள்ளுபவர்களின் வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் உடல் சார்ந்த பிரச்சினைகள், சமூகத்திடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் அவமதிப்பு, பள்ளிகளில் அவர்களின் குழந்தைகள் எதிர்கொள்ளும் கிண்டல் என்றெல்லாம் அவர்களின் பிரச்சினைகள் ஏராளம். அகில இந்திய அளவில் இந்தியா முழுவதும் ரயில்வே துறையில் சுமார் 3 லட்சம் பேர், கையால் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக, அரசின் புள்ளி விபரமே சொல்கிறது. ஆனால், இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த ஆட்சியாளர்களுக்கும் சிந்தனை வரவில்லை என்பது தான் கொடுமையிலும் மிக கொடுமை.

 

எல்லோரும் மனிதர்கள் தான், விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் உரிமை வேண்டும் என்று முழங்குகிறோம், கேள்விகளை எழுப்புகிறோம். அந்தக் கேள்விக்கான விடையைத் தேடுவதில் இருக்கிறது, மனிதநேயத்துக்கான விடியல்..!