ADVERTISEMENT

3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை... விழுப்புரம் அதிமுக பிரமுகர் கைது!

07:31 PM Dec 15, 2019 | kalaimohan

விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக அதிமுக பிரமுகர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரத்தில் சித்தேரி பகுதியில் 3 நம்பர் லாட்டரி சீட்டு மோகத்தில் பணத்தை இழந்ததால் அருண் என்பவர் மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த சம்பவத்தில் தற்கொலை செய்துகொண்ட அருண் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் மூணு நம்பர் லாட்டரி சீட்டு என்னைப்போன்ற பல தொழிலாளிகள் குடும்பத்தை சீரழித்து விட்டது. காவல்துறை இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வீடியோ எடுத்து வெளியிட்டுவிட்டு சயனைடு சாப்பிட்டு தானும், தன் குழந்தைகளையும், மனைவியையும் சாகடித்து கொன்றார்.

இந்நிலையில் விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றதாக அதிமுக பிரமுகரான கோல்டு சேகர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT