Skip to main content

விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரைக்கு எதிராக 3 எம்.எல்.ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம்!

Published on 19/03/2018 | Edited on 19/03/2018
mla


விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என எம்.எல்.ஏ.,க்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருகின்றனர்.

ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்யத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், வார விடுமுறையாக வியாழன் அறிவித்தல், உலக இந்து தினத்தை அறிவித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் உத்தரபிரதேசத்தில் ரத யாத்திரை துவங்கியது. மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வரும் ரத யாத்திரை மார்ச் 20ல் ராஜபாளையம் வருகிறது. அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை சென்று, அதே நாளில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பின் அங்கிருந்து ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது.

இந்நிலையில், விஷ்வ இந்து பரிஷத் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை கேரளாவில் இருந்து தமிழகம் வரவுள்ள நிலையில் சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. யாத்திரை மூலம் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுமதி வழங்கக் கூடாது என எம்.எல்.ஏ.,க்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan review



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

Next Story

திமுக பிரமுகர் அடித்த காலண்டர்; போலீசில் புகாரளித்த இந்து முன்னணி

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Calendar scored by DMK person; Hindu Front reported to police

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக உள்ள திமுகவைச் சேர்ந்தவர் காயத்ரி இளங்கோ. இவர் 2024 க்கான மாத காலண்டர் ஒன்றை அச்சிட்டு வெளியிட்டிருந்தார். அதில் குறிப்பாக 2024 ஜனவரி 30 ஆம் தேதி 'ஆர்.எஸ்.எஸ் மதவெறிக்கு உத்தமர் காந்தி படுகொலை' (1948) என்று அச்சிடப்பட்டிருந்தது.  

'காந்தி படுகொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தும் வேண்டுமென்றே உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்கும் விதமாக, காழ்ப்புணர்ச்சியுடன் அமைதியை சீர்குலைத்து மதக்கலவரம் ஏற்படுத்தும் விதமாக காலண்டர் அச்சடித்து பொதுமக்களிடம் விநியோகம் செய்து வருகிறார்' என இந்து முன்னணியினர் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கமானது தேசபக்தி மிக்க நல்ல பண்புள்ள மனிதர்களை உருவாக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பின் நற்பெயரை சீர்குலைக்கும் வகையிலும், மக்களிடம் பிளவு ஏற்படுத்தி கலவரம் உருவாக வேண்டும் என்ற தீய எண்ணத்தில் காலண்டர் அச்சடித்து விநியோகம் செய்யும் காயத்ரி இளங்கோ என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இந்து முன்னணி ஈரோடு மாவட்ட தலைவர் பா. ஜெகதீசன் தலைமையில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.