Skip to main content

போடாத சாலைக்கு 3 கோடி ரூபாய்... 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்!

Published on 12/04/2022 | Edited on 12/04/2022

 

 3 crore rupees for unpaved road ... 5 employees suspended!

 

கரூரில் நெடுஞ்சாலைத்துறையில் போடாத சாலைகளுக்கு பணம் எடுக்கப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை சந்தித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு கொடுத்ததோடு, 5 முறை தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக பேட்டியளித்திருந்தார். இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக 4 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


கரூரில் நெடுஞ்சாலைத்துறையில் போடாத சாலைகளுக்கு 3 கோடி ரூபாய் பணம் எடுக்கப்பட்டு ஊழல் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன் சிங், கரூர் கோட்டை கணக்கர் பெரியசாமி என உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்