Skip to main content

கடலூர்  மாவட்டத்தில் 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்..! 

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

3 child marriages stops  Cuddalore district

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், இலையந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் கிரிதரன் என்பவருக்கும், கடலூர் மாவட்டம் ஜா.ஏந்தல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று (23.06.2021) மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக இருவீட்டார் உறவினர்களும் திருமணத்திற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில், குழந்தை திருமணம் நடைபெறுவதாக கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் சென்றது. அதன் பேரில் சமூக நலத்துறை அலுவலர் அன்பழகி, சைல்டு லைன் மாவட்ட ஆலோசகர் பார்த்தீபராஜ் ஆகியோர் வேண்டுகோளுக்கிணங்க, சிறுப்பாக்கம் போலீசார், மங்களூர் சமூகநல விரிவாக்க அலுவலர் பானுமதி ஆகியோர் விரைந்து சென்று மணமகள் உறவினர்களை சந்தித்து, "18 வயதுக்கு குறைவாக உள்ள பெண்களுக்குத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். மீறி திருமணத்தை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்ததுடன் திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள். மேலும், 16 வயது சிறுமியை அவரது பெற்றோருடன் நாளை கடலூர் சமூகநல அலுவலகத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதேபோல் கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில் பெண்களின் நலன் காக்க 'லேடிஸ் ஃபர்ஸ்ட்' என்ற திட்டத்தில் 8220006082 என்ற காவல் உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண்ணில் தொடர்புகொண்டு திட்டக்குடி தாலுகாவில் 18 வயது நிரம்பாத சிறுமிக்குத் திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவு எடுத்துள்ளதாகவும், அதைத் தடுத்து நிறுத்தும்படியும் கொடுத்த தகவலின் பேரில், உடனடியாக வேப்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்ததையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி அந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர். மேலும் சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரை கூறி, மீறி திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.

 

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா நாச்சியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் மாணிக்கம் (27) என்பவருக்கும் திட்டக்குடி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருப்பது குறித்து அப்பகுதி ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அதிகாரிக்குத் தகவல் அளித்தனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலர் சுகன்யா தலைமையிலான அதிகாரிகள் திருமணத்தைத் தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டனர். அதனைத் தொடர்ந்து சிறுமி கடலூர் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணிக்கத்தை கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.