Skip to main content

காப்புக்காட்டில் உயிரிழந்து கிடந்த பெண்; 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது; போலீசார் விசாரணையில் திடுக்

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

3 arrested, including a 17-year-old boy; The police are shocked at the investigation

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் காட்டுப்புதரில் பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள அத்திமரத்துப்பள்ளம் அடுத்துள்ள குண்டியால்நத்தம் பகுதி காப்புக்காட்டில் நான்கு நாட்களுக்கு முன்பு திருமணமான பெண் ஒருவர் சடலமாக கிடந்தார். பெண்ணின் மரணத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதாக பெண்ணின் மகள் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். பெண்ணின் உடலானது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

 

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் செல்போன் சுமார் 30 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்தபொழுது திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியை சேர்ந்த ஏழுமலை என்ற இளைஞருடன் அவர் கடைசியாக பேசியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் ஏழுமலையை தேடிவந்த நிலையில், உறவினர் வீட்டில் தஞ்சமடைந்திருந்த ஏழுமலையை கண்டுபிடித்து கைது செய்தனர்.

 

ஏழுமலையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏழுமலை அப்பெண்ணிடம் நெருக்கமாகப் பழகி வந்தது தெரிய வந்தது. இதற்கு ஏழுமலை பணம் கொடுத்து வந்ததாகவும் தெரிந்தது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஏழுமலை, கோவிந்தராஜ், 17 வயது சிறுவன் ஒருவன் என மூன்று பேர் மது அருந்திவிட்டு பெண்ணிற்கு போன் செய்து உடனடியாக காப்புக்காட்டுப் பகுதிக்கு வரும்படி தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இளைஞர்கள் சொன்னபடி காப்புக்காட்டுப் பகுதிக்கு வந்த அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருந்தனர். பெண்ணும் இளைஞர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர் மூவரிடமும் அப்பெண் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் தர மறுத்துள்ளனர். உடனடியாக அங்கிருந்த நபர் ஒருவரின் செல்போனை அப்பெண் பறித்துக்கொள்ள, இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் சேர்ந்து அவரை தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது.

 

பின்னர் சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவனை கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற இருவரை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.