Skip to main content

16 வயது சிறுமியை திருமணம் செய்த 28 வயது இளைஞர் - தக்க தீர்ப்பு வழங்கிய நீதிபதி!

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

A 28-year-old man who married a 16-year-old girl

 

திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் தாலுகா தேனீர்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி என்பவரது மகன் சூரிய மூர்த்தி(28). இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பால் வியாபாரம் செய்ய வந்தவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கி பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரிடம் ஆசைவார்த்தை கூறி அடிக்கடி சந்தித்து அவரை தன் வலையில் விழ வைத்துள்ளார். சூரிய மூர்த்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிறுமியின் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அவரை  கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சிறுமியின் தாயார் தன் மகள் கடத்தப்பட்டுள்ளதாக காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியைத் தேடி வந்தனர். இந்த நிலையில் திருச்சி பகுதியில் சூரிய மூர்த்தி வாடகை வீட்டில் தங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காட்டுமன்னார்கோவில் போலீசார் சிறுமியையும், அவரைக் கடத்திச் சென்று சூரிய மூர்த்தி ஆகிய இருவரையும் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சூரிய மூர்த்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சி பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் வைத்து சிறுமியைத் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்ததாகக் கூறியுள்ளார். மேலும் சூரிய மூர்த்தி ஏற்கனவே இரண்டு பெண்களைத் திருமணம் செய்து அவர்களுக்கு விவாகரத்து கொடுத்தவர்.

 

அப்படிப்பட்டவர் 16 வயது சிறுமியை ஏமாற்றிக் கடத்திச் சென்றது குறித்து வழக்குப்பதிவு செய்த காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் சூரியமூர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் சூரியமூர்த்தி சிறை காவலில் வைக்குமாறும் சிறுமியை அவரது தாயாருடன் தங்கியிருப்பதற்கு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. சூரியமூர்த்தி ஏற்கனவே இரண்டு பெண்களைத் திருமணம் செய்து அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்றவர். மேலும் மூன்றாவதாக ஒரு சிறுமியைத் திருமணம் என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பாகச் சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளித்துள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.