Skip to main content

கடலூர் மாவட்டத்தில் 27 வட்டாட்சியர்கள் அதிரடி மாற்றம்

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
27 district officials have been changed in Cuddalore district

கடலூா் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அதிரடி நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள 27 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கடலூா் வட்டாட்சியராக அ.பலராமன், பண்ருட்டி எஸ்.ஆனந்த், குறிஞ்சிப்பாடி ச.அசோகன், சிதம்பரம் பா.ஹேமா ஆனந்தி, காட்டுமன்னார்கோயில் வே.சிவக்குமார், ஸ்ரீமுஷ்ணம் எம்.சேகா், விருதாச்சலம் வெ.உதயகுமார், திட்டக்குடி ஆ.அந்தோணிராஜ், புவனகிரி எம்.தனபதி ஆகியோரை புதிய வட்டாட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது போன்று கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக (குற்றவியல்) அலுவலக மேலாளராக ஜெ.விஜய் ஆனந்த், அலுவலக மேலாளா் (பொது) வி.செம்மனசெல்வி, நெய்வேலி நில எடுப்பு அலுவலக கண்காணிப்பாளராக சே.சுரேஷ்குமார், கடலூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலக தனி வட்டாட்சியராக ஆா்.ஆனந்தி, திட்டக்குடி தனி வட்டாட்சியராக க.ஜெயந்தி, விருத்தாச்சலம் ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியராக கே.வெற்றிவேல், கடலூா் உதவி ஆணையா் கலால் அலுவலகம் மேற்பார்வைவை அலுவலராக ஜெ.ஜான்சிராணி, கடலூா் குடிமை பொருள் தனிவட்டாட்சியராக என்.ஜெயக்குமார், சிதம்பரம் ஆதி திராவிடா் நல தனிவட்டாட்சியராக ஜெ.சுதா, கடலூா் கோட்ட கலால் அலுவலராக பெ.உலகளந்தான், கடலூா் டாஸ்மாக் மேலாளராக பா.மகேஷ், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் (தேர்தல்) தனி வட்டாட்சியராக மு.தமிழ்ச்செல்வன்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் (பேரிடா் மேலாண்மை) தனி வட்டாட்சியராக எ.ஹரிதாஸ், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை 45-ஏ (நில எடுப்பு) தனிவட்டாட்சியராக கோ.செல்வகுமார், சிதம்பரம் கோட்டாட்சியா் நேர்முக உதவியாளராக சு.புகழேந்தி, பண்ருட்டி தேசிய நெடுஞ்சாலை 45சி (நில எடுப்பு) தனி வட்டாட்சியராக ஆா்.கார்த்திக், நெய்வேலி (நில எடுப்பு) எண் 6 தனிவட்டாட்சியா் எம்.சரஸ்வதி, சிதம்பரம் (குடிமை பொருள்) தனிவட்டாட்சியராக ஆா்.தமிழ்ச்செல்வி ஆகியோர்பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மேற்கண்ட பணியிட மாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ள வட்டாட்சியா்கள் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் உடனடியாக பணியில் சேர வேண்டும்.

இது தொடா்பாக எவ்வித விடுப்பு, மேல்முறையீடும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. சம்பந்தப்பட்ட சார்நிலை அலுவலா்கள், மேற்படி அலுவலா்கள் பணியில் சோந்த விவரத்தை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது.