சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர்சிலைகள் அமைப்பதற்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 2,700 விநாயகர்சிலைகள் அமைக்க அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 2,600 சிலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதற்றமான இடங்களில் தேவையான பாதுக்காப்பு வழங்கஏற்பாடுகள்செய்யப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.