Skip to main content

எல்லைமாறும் 26 கிராமங்கள்...!! போராட்டத்தில் விவசாயிகள்...!!

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

வேலூர் மாவட்டம் சில மாதங்களுக்கு முன்பு வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை என மூன்றாக பிரிக்கப்பட்டது. இதற்கான மாவட்ட எல்லை வரையறை 90 சதவிதம் முடிந்துள்ளது. இந்நிலையில் சில கிராமங்கள் வேலூர் மாவட்டமா ? அல்லது திருப்பத்தூர் மாவட்டமா? என்கிற குழப்பம் நீடித்து வருகிறது.

 

 26 villages changing the border ... !! Farmers in struggle ... !!

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் தாலுகா எங்கள் கிராமத்துக்கு மிக அருகாமலையில் உள்ளது. பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள எங்களை மாதனூர் ஒன்றியத்தில் கொண்டும்போய் சேர்ப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பி போராட்டம் நடததி வருகின்றனர்.

ஆம்பூர் அருகே பேரணாம்பட்டு ஒன்றியத்தில் துத்திப்பட்டு வருவாய் பிர்கா கிராமங்களான 26 கிராமங்களை வேலூர் மாவட்டத்தில் உள்ள மாதனுர் ஒன்றியத்தில் சேர்ப்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்மென திருப்பத்தூர் மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பில் தொடர் முழக்க போராட்டம் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு அரசுக்கு எதிராக, அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். வழக்கறிஞர்களை தொடர்ந்து விவசாயிகளும் இந்த 26 கிராமங்களுக்காக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.