Advertisment

அரசு ஊழியர்- ஆசிரியர்கள் மறியல் போராட்டம்

Government Employees - Teachers

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான (ஜாக்டோ - ஜியோ) சார்பில் தொடர் மறியல் போராட்டம் இன்று முதல் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisment

சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள். கோட்டை நோக்கி புறப்பட தயாராக இருந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி இருந்தனர். தொடர் மறியல் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

Advertisment

அதனால் சிறிது நேரம் வரை போராட்டக்குழுவினர் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். 100 பெண்கள் உள்பட 1000 பேர் கைது செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு பஸ், வேனில் போலீசார் அழைத்து சென்றனர்.

Government Employees - Teachers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe