Skip to main content

தமிழக மின்துறையின் ஆதரவுடன் நிலக்கரி போக்குவரத்தில் 2500 கோடி ஊழல்-ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் அறப்போர் இயக்கம்!!

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

தமிழக மின்சார வாரியம் நிலக்கரி போக்குவரத்தில் 2500 கோடி மதிப்பில் ஊழல் நடந்ததற்கான ஆதாரத்தை அறப்போர் இயக்கம் லஞ்சம் ஒழிப்பு துறையிடம் புகார் அளித்துள்ளது.

 

இந்த ஊழல் குறித்து அறப்போர் இயக்கத்தின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெயராமன் எத்தகைய ஊழல் நடந்திருக்கிறது என்று விளக்கமளித்தார். தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு தேவைப்பட கூடிய நிலக்கரியை மகிநிதி, ஈஸ்டேர்ன் நிலக்கரி சுரங்களிலிருந்து விஷாகபட்டினம் துறைமுகம் வழியாக கொண்டுவரப்படுகிறது. இதற்காக டெண்டரை 2001 ஆம் ஆண்டு 5 மாதத்திற்கு சவுத் இந்தியா கார்பிரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டது. துறைமுகத்தில் நிலக்கரி இறக்குவதற்கு அங்குள்ள   கூலி ஆட்களை பயன்படுத்த துறைமுகத்தின் விதிப்படி கட்டணத்தை அந்த நிறுவனம் செலுத்த வேண்டும். அந்த கட்டணம் கட்டிய ரசீதை பயன்படுத்தி தமிழக மின்சார வாரியத்திடம் பணம் பெற்று கொள்ளலாம் என்பது தெளிவாக விதிகளில் குறிப்பிடபட்டு  இருக்கிறது. இதில் ஒப்பந்த தாரருக்கு மட்டும் ஒரு மெட்ரிக் டன்னுக்கு 24.05ரூபாயை மின்சார வாரியம் வழங்குகிறது.

 

arappor iyakkam

 

2011 ஏப்ரல் முதல் 2016 மார்ச் வரை ஆண்டுக்கு 25 லட்சம் மெட்ரிக் டன் முதல் 35லட்சம் மெட்ரிக் டன் கொண்டுவரப்பட்டது. இதில் சவுத் இந்திய கார்பிரேஷன் நிறுவனம் கூலி தொகை மற்றும் அதன் வரியாக விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு 239.56 கோடியை செலுத்தி இருக்கிறது. ஆனால் இதன் சவுத் இந்திய கார்பிரேஷன் நிறுவனம் விசாப்பட்டினம் துறைமுகத்தில் நிலக்கரி இறக்க கூலியாக 1267.6 கோடி செலுத்தியதாக மின்சார வாரித்திடமிருந்து 1267.6 கோடியை பெற்று இருக்கிறது. நிலக்கரி கொள்முதல் விதிப்படி துறைமுகத்தில் பணி செலுத்திய இரசீதையே வாங்காமல் ஒப்பந்த நிறுவனமும் மின்சார வாரிம தலைமை அதிகாரிளும் 1028 கோடி சுருட்டியுள்ளனர்.

 

arappor iyakkam

 

கடந்த 2001 முதல் 2016 வரை இது போன்ற மோசடி மூலம் குறைந்தபட்ச 2500கோடி தாண்டும். இந்த ஊழல் 2016 ஆம் ஆண்டு Tariff for major ports ல் துறைமுகத்திற்கும் மின்சார வாரியத்திற்கு Thermal Piece rate levy குறித்த வழக்கில் ஆதாரங்கள் வெளியாகி இருக்கிறது. 2001 ஆம் விடப்பட்ட டெண்டருக்கு பிறகு இது வரை டெண்டர் விடாமல் ஒரே நிறுவனத்திற்கு தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறார்கள். இது தொடர்பாக மத்திய தணிக்கை துறையும் இந்த ஊழலை சுட்டி காட்டி இருக்கிறார்கள்.

 

 

சவுத் இந்தியன் கார்பரேஷன் நிறுவனமான எம்ஏஎம் ராமசாமி நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனமாகும். திமுக ஆட்சி காலத்தில் ஆர்காடு வீராசாமி அதிமுக ஆட்சி காலத்தில் தங்கமணி,ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தெரியாமல் இது நடைபெற வாய்ப்பு இல்லை என்கிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.