Skip to main content

சாமியார் பேச்சைக்கேட்டு நடுவீட்டில் 25 அடிக்கு குழிதோண்டிய பெண்.... கனிமவளத்துறை வசம் சிக்கிய சாமியார்!

Published on 18/08/2019 | Edited on 19/08/2019

சென்னையில் மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு செய்வினை தகடை எடுப்பதாக நடு வீட்டில் 25 அடிக்கு ஆழமாக குழி தோண்டியதால் போலிஸ் மட்டுமில்லமால் கனிம வளத்துறையின் பிடியில் சிக்கி இருக்கிறார் பெண் ஒருவர்.

 

25 feet deep Pit in the middle of the house in Chennai...

 

சென்னை டிபி சத்திரத்தில், கேவிஎன்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. அவரது மனைவி மைதிலி. இவர்கள் இருவரும் அங்குள்ள குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். மைதிலி ஜாதகம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர். இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டம் காரணமாக ஜாதகம் பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் செய்வினை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை எடுத்தால்தான் குடும்பம் வளம்பெறும் என்றும், இல்லையெனில் உங்கள் இருவர் உயிருக்கும் ஆபத்து என்றும் கூறப்பட்டது.

 

25 feet deep Pit in the middle of the house in Chennai...

 

இதனையடுத்து ஒருநாள் ராஜாவின் கை, கால்கள் திடீரென செயலிழந்தந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சேர்த்து கணவருக்கு சிகிச்சை அளிக்காமல் கணவர் ராஜாவை மின்ட் தங்கசாலையில் உள்ள மந்திரவாதியான சுரேஷ் என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார் மைதிலி. அவர்களிடம் இருந்த பணத்தை நைசாக பேசி உருவிக்கொண்ட அந்த மந்திரவாதி வீட்டிற்குள் செய்வினை தகடு ஒன்று புதைக்கப்பட்டு இருக்கிறது என்றும், அதனைத் தோண்டி எடுத்து விட்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும், கணவர் ராஜாவிற்கும் உடல்நிலை சரியாகி விடும் என்றும் கதை அளந்து விட்டுள்ளார்.

 

25 feet deep Pit in the middle of the house in Chennai...

 

இதனை உண்மை என்று நம்பிய மைதிலி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மந்திரவாதியின் துணையுடன் நள்ளிரவு வேளையில் வீட்டிற்குள் தகட்டை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார். வீட்டுக்கு நடுவில் குழி தோண்டி தகட்டை தேடியுள்ளார். கயிற்றைக் கட்டி கிணறு போல் 25 அடி ஆழத்திற்கு தோண்ட, மூட்டை மூட்டையாக மண் வந்ததே தவிர தகடு ஏதும் கண்ணில் அகப்படவில்லை.

 

25 feet deep Pit in the middle of the house in Chennai...

 

இப்படி வீட்டின் நடுவில் தோண்டப்பட்ட குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை மூட்டையாக கட்டி வீட்டிற்கு வெளியே வைத்துள்ளார் மைதிலி. இரவில் மைதிலியின் வீட்டில் ஏதோ நடக்கிறது, வீட்டுக்கு வெளியில் ஏன் இவ்வளவு மண் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது என சந்தேகித்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். மைதிலியின் வீட்டிற்கு வெளியே 70 மூட்டை மண் இருப்பதை கண்டு அதிர்ந்துபோன காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

 

25 feet deep Pit in the middle of the house in Chennai...


அப்போது அந்த விசாரணையில் செய்வினைக்கு வைக்கப்பட்ட தகட்டை எடுப்பதற்காக நடுவீட்டில் இருபத்தைந்து அடிக்கு குழி தோண்டியது வெளி வந்தது. இது தொடர்பாக மைதிலி, அவருடைய கணவர் ராஜா, அந்த மந்திரவாதி சுரேஷ் ஆகியோரை விசாரித்த காவல்துறையினர் கனிமவள துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது மூவரும் கனிம வளத்துறை அதிகாரிகளின் வசம் உள்ளனர்.

செய்வினை கோளாறு என்று நம்பி நடு வீட்டில் 25 அடி ஆழத்திற்கு குழியை தோண்டியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.