Skip to main content

25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையில் ஓட்டை... விவசாயிகள் கொந்தளிப்பு... திமுக போராட்டம்! 

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

25 crore dam block ... Farmers riot ... DMK struggle!

 

சாத்தனூர் அணை நிரம்பி அதிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் பெண்ணையாறு வழியாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைக் கடந்து கடலூர் அருகே கடலில் கலக்கிறது.

 

இந்த ஆறு விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து கரைப் பகுதிகளில் உள்ள 200 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்களை வாழ வைத்துவருகிறது. இப்படி நீண்ட தூரம் பயணிக்கும் பெண்ணையாற்றில் ஆங்கிலேயர் காலத்தில் திருக்கோவிலூர் அருகே ஒரு தடுப்பணை மட்டும் கட்டப்பட்டது. இதன் வடபகுதியில் உருவாக்கப்பட்ட வாய்க்கால் மூலம் சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்களும், அதேபோன்று தென் கரையில் இருந்து வெட்டப்பட்ட வாய்க்கால் மூலம் சித்தலிங்கமடம் வழியாகப் பயணம் செய்து, சுமார் 15 கிராம விவசாயிகளும் பயனடைந்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட எல்லையில் பெண்ணை ஆற்றில் சில இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று பல்வேறு கிராம மக்களும் விவசாயிகளும் கோரிக்கை வைத்து, அவ்வப்போது பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தனர். இதன் பயனாக விழுப்புரம் மாவட்ட எல்லையிலுள்ள தாளவனூர் -கடலூர் மாவட்ட எல்லையிலுள்ள ஏனாதிமங்கலம் ஆகிய இரு ஊர்களுக்கிடையே கடந்த 2018ஆம் ஆண்டு தமிழக அரசின் பொதுப் பணித்துறையால் செயல்படும் நீர்வள ஆதார அமைப்பு மூலம் 25 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது.

 

இதன் நீளம் 400 மீட்டர், உயரம் 3 மீட்டர். இந்தத் தடுப்பணை பணிகள் ஒரு ஆண்டிலேயே கட்டிமுடிக்கப்பட்டு மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தால் 2019 ஆம் ஆண்டு திறப்புவிழா செய்யப்பட்டது. இந்த தடுப்பணை மூலம் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு, இருகரை பகுதிகளிலும் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து. குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று திட்டமிட்டு கட்டப்பட்டது. மேலும் இப்பகுதியில் இருந்து இரு பகுதிகளிலும் பல்வேறு கிராமங்களுக்கு ஆழ்குழாய் மூலம் கூட்டுக் குடிநீர் திட்டமும் செயல்பட்டு வருகிறது. இவற்றுக்கெல்லாம் ஆதாரமாக இருக்கும் என்று அந்த நம்பிக்கையோடும் மிகுந்த எதிர்பார்ப்போடு கட்டப்பட்டது இந்தத் தடுப்பணை.

 

25 crore dam block ... Farmers riot ... DMK struggle!

 

கட்டி திறக்கப்பட்டதும் பொதுமக்கள் விவசாயிகள் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் எனப் பலரும் தடுப்பணை கட்டப்பட்டதை வரவேற்று சந்தோஷப்பட்டனர். ஆனால், சமீபத்தில் பெய்த மழையால் பெண்ணை ஆறு பெருக்கெடுத்து ஓடி வந்தது. இந்தத் தடுப்பு அணையில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் தேங்கி நின்றது. இதனைக் கண்டு சந்தோசமடைந்த பொதுமக்கள் சுற்றுலா செல்வது போல அந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கி இருக்கும் காட்சியைப் பார்ப்பதற்காகச் சென்று வந்தனர். திடீரென்று நேற்று இந்த அணையின் தென்பகுதி கரையின் பக்கச் சுவரில் பெரும்துளை ஏற்பட்டு அணையில் தேங்கி இருந்த தண்ணீர் முழுவதும் அதன் வழியாக வெளியேறியது. இதனால் பக்கச் சுவர் உள்வாங்கி உள்ளது. அணையில் தேக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேறியதால் இப்பகுதி மக்களும் விவசாயிகளும் வேதனையில் உள்ளனர்.

 

இனிமேல் மழை பெய்து தண்ணீர் வருவதற்கு சாத்தியம் இல்லை. தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்பு இல்லை. தேங்கிய தண்ணீர் வெளியேறிவிட்டது.  25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையில் பக்கச் சுவரில் எப்படி ஓட்டை விழுந்தது. தரமில்லாமல் கட்டப்பட்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று வேதனை தெரிவிக்கின்றார்கள் இப்பகுதி விவசாயிகள்.

 

25 crore dam block ... Farmers riot ... DMK struggle!

 

இதைக் கேள்விப்பட்ட திமுகவின் முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ-வுமான பொன்முடி, கட்சியின் மாவட்டச் செயலாளர் புகழேந்தி ஆகியோர் அந்தப் தடுப்பணை உள்வாங்கி தண்ணீர் வெளியேறிய இடத்தைப் பார்வையிடச் சென்றனர். அதன் நிலைமையைப் பார்த்த அவர்கள், "இந்த அணை\யைக் கட்டுவதற்காக 25 கோடியை, ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க காரணமாக இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 25 கோடியில் அணை தரமாகக் கட்டப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தரமற்ற அணை கட்டிய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி தடுப்பணை அருகிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.