Skip to main content

25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையில் ஓட்டை... விவசாயிகள் கொந்தளிப்பு... திமுக போராட்டம்! 

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

25 crore dam block ... Farmers riot ... DMK struggle!

 

சாத்தனூர் அணை நிரம்பி அதிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் பெண்ணையாறு வழியாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைக் கடந்து கடலூர் அருகே கடலில் கலக்கிறது.

 

இந்த ஆறு விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து கரைப் பகுதிகளில் உள்ள 200 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்களை வாழ வைத்துவருகிறது. இப்படி நீண்ட தூரம் பயணிக்கும் பெண்ணையாற்றில் ஆங்கிலேயர் காலத்தில் திருக்கோவிலூர் அருகே ஒரு தடுப்பணை மட்டும் கட்டப்பட்டது. இதன் வடபகுதியில் உருவாக்கப்பட்ட வாய்க்கால் மூலம் சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்களும், அதேபோன்று தென் கரையில் இருந்து வெட்டப்பட்ட வாய்க்கால் மூலம் சித்தலிங்கமடம் வழியாகப் பயணம் செய்து, சுமார் 15 கிராம விவசாயிகளும் பயனடைந்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட எல்லையில் பெண்ணை ஆற்றில் சில இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று பல்வேறு கிராம மக்களும் விவசாயிகளும் கோரிக்கை வைத்து, அவ்வப்போது பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தனர். இதன் பயனாக விழுப்புரம் மாவட்ட எல்லையிலுள்ள தாளவனூர் -கடலூர் மாவட்ட எல்லையிலுள்ள ஏனாதிமங்கலம் ஆகிய இரு ஊர்களுக்கிடையே கடந்த 2018ஆம் ஆண்டு தமிழக அரசின் பொதுப் பணித்துறையால் செயல்படும் நீர்வள ஆதார அமைப்பு மூலம் 25 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது.

 

இதன் நீளம் 400 மீட்டர், உயரம் 3 மீட்டர். இந்தத் தடுப்பணை பணிகள் ஒரு ஆண்டிலேயே கட்டிமுடிக்கப்பட்டு மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தால் 2019 ஆம் ஆண்டு திறப்புவிழா செய்யப்பட்டது. இந்த தடுப்பணை மூலம் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு, இருகரை பகுதிகளிலும் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து. குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று திட்டமிட்டு கட்டப்பட்டது. மேலும் இப்பகுதியில் இருந்து இரு பகுதிகளிலும் பல்வேறு கிராமங்களுக்கு ஆழ்குழாய் மூலம் கூட்டுக் குடிநீர் திட்டமும் செயல்பட்டு வருகிறது. இவற்றுக்கெல்லாம் ஆதாரமாக இருக்கும் என்று அந்த நம்பிக்கையோடும் மிகுந்த எதிர்பார்ப்போடு கட்டப்பட்டது இந்தத் தடுப்பணை.

 

25 crore dam block ... Farmers riot ... DMK struggle!

 

கட்டி திறக்கப்பட்டதும் பொதுமக்கள் விவசாயிகள் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் எனப் பலரும் தடுப்பணை கட்டப்பட்டதை வரவேற்று சந்தோஷப்பட்டனர். ஆனால், சமீபத்தில் பெய்த மழையால் பெண்ணை ஆறு பெருக்கெடுத்து ஓடி வந்தது. இந்தத் தடுப்பு அணையில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் தேங்கி நின்றது. இதனைக் கண்டு சந்தோசமடைந்த பொதுமக்கள் சுற்றுலா செல்வது போல அந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கி இருக்கும் காட்சியைப் பார்ப்பதற்காகச் சென்று வந்தனர். திடீரென்று நேற்று இந்த அணையின் தென்பகுதி கரையின் பக்கச் சுவரில் பெரும்துளை ஏற்பட்டு அணையில் தேங்கி இருந்த தண்ணீர் முழுவதும் அதன் வழியாக வெளியேறியது. இதனால் பக்கச் சுவர் உள்வாங்கி உள்ளது. அணையில் தேக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேறியதால் இப்பகுதி மக்களும் விவசாயிகளும் வேதனையில் உள்ளனர்.

 

இனிமேல் மழை பெய்து தண்ணீர் வருவதற்கு சாத்தியம் இல்லை. தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்பு இல்லை. தேங்கிய தண்ணீர் வெளியேறிவிட்டது.  25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையில் பக்கச் சுவரில் எப்படி ஓட்டை விழுந்தது. தரமில்லாமல் கட்டப்பட்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று வேதனை தெரிவிக்கின்றார்கள் இப்பகுதி விவசாயிகள்.

 

25 crore dam block ... Farmers riot ... DMK struggle!

 

இதைக் கேள்விப்பட்ட திமுகவின் முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ-வுமான பொன்முடி, கட்சியின் மாவட்டச் செயலாளர் புகழேந்தி ஆகியோர் அந்தப் தடுப்பணை உள்வாங்கி தண்ணீர் வெளியேறிய இடத்தைப் பார்வையிடச் சென்றனர். அதன் நிலைமையைப் பார்த்த அவர்கள், "இந்த அணை\யைக் கட்டுவதற்காக 25 கோடியை, ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க காரணமாக இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 25 கோடியில் அணை தரமாகக் கட்டப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தரமற்ற அணை கட்டிய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி தடுப்பணை அருகிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.